Monday, March 10, 2008

இந்து மதம் எங்கிருந்து வந்தது?

நான்காயிரம் வருடங்களுக்கு முன்பு ஓடிச் செல்லுங்கள் முடிகிறதா? உங்கள் மனக்குதிரையில் ஏறி உட்கார்ந்து கொண்டு கற்பனை, சிந்தனை இரண்டு சாட்டைகளாலும் விரட்டுங்கள். வரலாறு துல்லியமாக கணிக்க முடியாத காலத்தின் பாதாளப் பகுதி அது. மலைகள், காடுகள் என மனிதர்களையே பயமுறுத்தியது பூமி. இமயமலைக் குளிர் காற்றில் நடுங்கியபடி ஓடிக் கொண்டிருக்கிறது சிந்துநதி. என்ன திமிர்? அத்தனை குளிரிலும் மானசரோவரில் பிறந்த சுமார் ஆயிரம் மைல்கள் மலையிலேயே நடை பயின்று பிறகுதான் கீழிறங்குகிறாள் சிந்து......அது அந்தக்கால ஆப்கானிஸ்தான் நிர்வாண மனிதர்கள். சாப்பிடத் தெரியாது. எதுவும் தெரியாது. மாலை மயங்கி இருள் இழைய ஆரம்பித்தால் பயத்தில் சிகரத்தில் ஏறி குகைகளுக்குள் விழுந்து விடுவார்கள். சூரியன் மறுநாள் வந்து விளக்கேற்றிய பிறகுதான் பயம்போய் வெளியே வருவார்கள்.பூமியே புதிராக தெரிந்தது. அவர்களுக்கு நதியை யார் துரத்துவது? பயந்தனர். மரத்தின் தலையைப் பிடித்து உலுக்குவது யார்? பயந்தனர் சுற்றிலும் இருள் பூசியது யார்? நடுங்கினர். இந்தப் பயத்தாங் கொள்ளிகளுக்கிடையே சிலபேர் பயப்படாமல் பார்த்தார்கள். மலை, நதி, மரம், வானம், உற்றுப் பார்த்தார்கள். அவர்களின் மூளைக் குள்ளும் சூரியன் உதித்தது. மனிதனுக்கே உரிய சிந்தனா சக்தி அந்த சிலருக்கு வயப்பட்டது. சிந்தனையை இரு கண்களிலும் ஏற்றி வைத்துக் கொண்டு பார்வையால் உலகத்தைக் குடைந்தனர். விளைவு...?கண்டு பிடிக்கப்பட்டது தெய்வம். இதுவரைப் பார்த்து பயந்த மரம், செடி, கொடி, மலை நதி தான் தெய்வம். இருட்டை ஓடஓட விரட்டுகிறானே அந்த வெளிச்சம்தான் தெய்வம் என்றான் உற்றுப் பார்த்தவன். (இந்த தெய்வம் என்ற பதம்தான் ஜரோப்பியர்களால் டிவைன் (Divine) என வழங்கப்படுகிறது. ஆரியர்களில் ஒரு பகுதிதான் ஜரோப்பாவுக்கு நகர்ந்தது).இயற்கை தான் கடவுள். துரத்தும், உலுக்கும் சக்தி தான் கடவுள். உற்றுப் பார்த்தவன், பார்த்தான் பார்த்தான் பார்த்துக் கொண்டே இருந்தான்.அவனுக்கு ரிஷி என பெயர். ரிஷி என்றால் பார்ப்பான், பார்ப்பான், பார்த்துக்கொண்டே இருப்பான். நமக்கும் மேல் ஒரு சக்தி இருக்கிறது என கண்டுபிடித்தவர்கள் அடுத்ததாய் அதற்கு நாம் கட்டுப்பட்டு வாழ்வதெப்படி என்பதையும் வகுத்தார்கள் உண்டாயிற்று வேதம். உற்றுப் பார்த்து சிந்தித்து சிந்தனையாளர்களால் நாகரிகம் மெல்ல மெல்ல அரும்பத் தொடங்கியது.‘இந்த உலகமே தெய்வம்தான். நாம் வாழ சந்தோஷமாக வாழத்தான் தெய்வத்தைப் பயன்படுத்த வேண்டும்” -வகுத்தது வேதம்.“Civilisation never born, but, it is the heritage of humanity” என பிற்பாடு அமெரிக்க அறிஞர் ப்ரைஸ் சொன்னது போல் தொட்டுத் தொடர்ந்தது நாகரிகம்.முதலில் இயற்கையைப் பார்த்துப் பயந்த மனிதர்களுக்கு சிந்தனை செய்து உற்றுப் பார்த்த மனிதனான ரிஷி அறிவுரை சொன்னான். பயப்படாதே.. நீயும் நானும் நன்றாக வாழ வேண்டும். அதற்கு இந்த மரத்தைப் பயன்படுத்துவோம். நதிகளைப் பயன்படுத்துவோம். இயற்கை நமக்காகத்தான் வேதம் ஒரு கட்டுப்பாடு மிக்க கலாச்சாரத்தைக் கொண்டு வந்தது.ஆரிய இனத்தவர்கள் என வரலாற்று ஆசிரியர்களால் வர்ணிக்கப்படும்...இம் மனிதர்களிடையே இப்படித்தான் வேத மதம் பிறந்தது. இந்த நல்லெண்ணச் சிந்தனை வளர்ந்து மெருகேற்றியதுதான் சமூக அமைப்பு. கலாச்சாரத்தைக் கட்டிக் காப்பாற்ற. ஒரு கட்டுமானம் வேண்டும். அது ஆளப்பட வேண்டும். வேதம் சொன்ன நெறிமுறைகளை வைத்து வாழ கற்றுக்கொள்ளப்பட வேண்டும்.அதற்கு என்ன செய்தார்கள்? பிரித்தார்கள். மூன்றாக பிரித்தார்கள். தங்களைத் தாங்களே நிருவாகம் செய்வதற்கு ஆள்வதற்கு ஒரு பிரிவு. அவர்கள் சொன்னபடி செய்து முடிப்பதற்கு ஒரு பிரிவு. இதோடு நிறுத்தவில்லை. ஆள்பவனையும் ஆளப்படுபவனையும் வேதம் சொல்லும் நெறி முறைகளைச் சொல்லிக்கொடுத்து... அவர்கள் தடம் பிறழாமல் காப்பதற்காக ஒரு பிரிவு.ஆள்பவன் ஷத்திரியன் ஆனான். ஆளப்படுபவன் அதாவது உழைப்பவன் வைசியன் ஆனான். இவர்கள் இரண்டு பேரையும் வேதத்தை வைத்துக் கொண்டு, வேதத்தைக் கற்று நீதி நெறிப்படுத்தியவன் பிராமணன் ஆனான். ஆட்சி செய்வதற்கே நேரம் போதவில்லை என அதில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்தனர் க்ஷத்திரியர்கள். உழைக்க வேண்டும். பிழைக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக வியர்வை சிந்த புறப்பட்டுவிட்டார்கள் சிந்தனாசக்தி குறைந்த அப்போதைய வைசியர்கள். பிராமணர்கள் பார்த்தார்கள். இவர்கள் இருவருமே வேதத்தை விட்டு விட்டுப் போய்விட்டார்களே....அதிலுள்ள கருத்துகளை கட்டளைகளை கர்மாக்களை நாம் தானே சிரமேற்கொண்டு செயல் படுத்தவேண்டும். எனவே வேதம் பிராமணர்கள் கைக்குப் போனது. இதெல்லாம் முழுக்க முழுக்க ஆப்கானிஸ்தானில் நடந்ததாகத்தான் வேத காலத்தைப் பற்றிய ஆராய்ச்சிகள் அறிவிக்கின்றன. ரிசா, குபா, க்ரமு என்கிற நதிகள் வேதத்தில் ஓடுகின்றன. இவை ஆப்கான் தேச நதிகள் என்பதால் வேதகாலம் பெரும்பாலும் ஆப்கான் பகுதியில் தான் நிகழ்ந்துள்ளதாகச் சொல்கின்றன வேதத்தில் மூழ்கியிருந்தோரின் முடிவுகள்.வேதம் பிராமணர்கள் கைக்கு போனதும் அறமும் தர்மமும் கர்மாக்களும் செவ்வனே நடந்தேறி வந்ததால்.. வேத மதம் பிராமண மதம் ஆயிற்று. ஆரிய மதம் வேதமாகி வேத மதம் பிராமண மதமாகி, காலவெள்ளத்தில் அவர்கள் இந்தியாவிற்குள் அடியெடுத்து வைக்க, அப்போது இங்கே சுமார் 450 மதங்கள் இருந்தனவாம். இவைகளில் எது இந்து மதம்?இந்தியாவில் இருந்த 450 மதங்களில் எது இந்து மதம்? படிப்படியாகப் பார்ப்போம்.ஒரு புருஷனும், அவன் பத்தினியும் மழை பெய்த சாலையில் நடந்து கொண்டிருக்கிறார்கள். வழியில் ஒரு பள்ளம். இடையில் மழை நீர் தெரு மண்ணோடு கூட்டணி வைத்து ‘சகதி’ அந்தஸ்தோடு கிடக்கிறது. புருஷன் பார்த்தான். ஒரே தாண்டு. இந்தப் பக்கம் வந்துவிட்டான். திரும்பிப் பார்த்தால் அவன் பத்தினி பாவமாக நின்று கொண்டிருந்தாள். தாண்டினால் விழ வேண்டியதுதான் என பயந்தாள். ‘கொஞ்சம் கை குடுங்கோ... வந்துடறேன்’ என்கிறாள் பத்தினி. இது உங்களுக்காக சொன்ன உதாரணம் தான்.இதேபோலத்தான் அன்று... ஆரியர்கள் சிந்து நதி, இமயமலை என பள்ளத்தாக்குகளை தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்து கொண்டிருக்கிறார்கள்.மழைச் சாலையைவிட மலைச் சாலை எவ்வளவு கடினமாக இருந்திருக்கும்? நதிக்கு கரையில்லாத காலமது. காடு, மலை, விலங்குகள் இவற்றை யெல்லாம் தாண்ட ஆரிய பெண்களுக்கு தைரியம் இல்லை. பெண்கள் கோரிக்கை விடுத்தார்கள். அது புறக்கணிக்கப்பட்டது.‘வரும் பெண்கள் வரலாம். வராதவர்கள் இங்கேயே இருக்கலாம்.’ஆப்கானிஸ்தானைவிட்டு ஆரியக் கூட்டம் கிளம்பி இந்தியாவுக்குள் நுழைந்த போது, கூட வந்த பெண்கள் மிக குறைவே. வரலாற்றுக் கண்ணோட்டத்தில், இங்கு வந்த ஆண்களின் எண்ணிக்கையோடு, பெண்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் அது புறக்கணிக்கத்தக்கது தான். ஆரியர்கள் பெண்களைத்தான் விட்டுவிட்டு வந்தார்கள். ஆனால், மனு ஸ்மிருதியை கையோடு கொண்டு வந்தனர்.மனு?வேதங்களை எல்லாராலும் படிக்க முடியாது. அஃதை விளங்கிக் கொள்ள அனைவருக்கும் அறிவு குறைவு. அதனால் வேதம் வகுத்த கர்மாக்களை, கட்டளைகளை விளக்கி, புரியும்படி சொல்கிறோம் என எளிமை என்ற பெயரில் செய்யப் பட்டது தான் மனுதர்மம். பிராமணன், ஷத்திரியன், வைசியன் என வேதம் வகுத்த சமூக நிலைகளை ‘மனு’ பிளவாக்கியது. கூடவே, இவர்களைத் தாண்டி ‘சூத்திரர்கள்’ என்ற பிரிவினரை உருவாக்கி அவர்களை வெறும் வேலைக்காரர்களாகவே ஆக்கியது மனு. பிராமணனுக்கு தவம், வேத அறிவு, ஞானம், விஞ்ஞானம் உள்பட 11 குணங்களை வகுத்த மனு - சூத்திரனைப்பற்றி இப்படி எழுதியது.“சூத்திரனுக்கு அறிவு கொடுக்காதே, தர்மோபதேசம் பண்ணாதே. சண்டை வந்தால் சூத்திரன் எந்தப் பக்கம் இருக்கிறானோ அந்தப் பக்கத்துக்கே தண்டனை கொடு. அவனை உதை...” இப்படிப் போகிறது மனு. வந்தேறிய இடத்தில் அனைவரும் சூத்திரர்கள் என்றும், அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்கவேண்டும் என்றும் பிராமணர்கள் செய்த திட்டம் ‘நன்றாகவே’ வேலை செய்தது. ஏற்கெனவே பிராமணர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஷத்திரியர்களும், வைசியர்களும் சூத்திரர்களை வேலைக்காரர்களாக எடுபிடிகளாக வைத்திருப்பது என்ற பிராமணர்களின் கோட்பாட்டுக்கு குழைந்தனர்.‘அடே... குழந்தாய் இந்தா பால். இதைக் குடித்து மகிழ்வாய் வாழு’ என்ற வேதத்தை மனு திரித்து... “இந்த பாலை இவன் குடிக்க வேண்டும்... இவன் குடிக்கக் கூடாது. இவன் எச்சில் படாமல் குடிக்க வேண்டும். இவன் பால் கறக்கும் மாட்டை மேய்க்கவேண்டும்” என பிளவு செய்தது.ஆரியர்கள் பெண்களை அழைத்து வரவில்லை என்று சொன்னோம் அல்லவா? இதற்குக் காரணம் என எடுத்துக்கொள்ள ஏதுவான மனு ஸ்லோகம் ஒன்றை பாருங்கள்.“பால்யே பிதிர்வஸே விஷ்டேதுபாணிக்ரஹா யௌவ் வனேபுத்ரானாம் பர்த்தரீ ப்ரேதுநபஜேத் ஸ்த்ரீ ஸ்வ தந்த்ரதாம்”“பெண்ணே... நீ குழந்தைப் பருவம் வரை அப்பன் சொன்னதை கேள்... வளர்ந்து மணமானதும் கணவன் சொன்னதைக் கேள். உனக்கு குழந்தை பிறந்து தலையெடுத்ததும் உன் மகன் சொல்வதைக் கேட்க வேண்டும். உனக்கு இது தான் கதி. நீ சுதந்திரமாக வாழத் தகுதியவற்றவள், ஆண் சொல்படி கேள்.” இப்படி ‘பெண்ணுரிமை’ பேசும் மனு இன்னொரு இடத்தில் சொல்கிறது. “பெண்கள் அசுத்தமானவர்கள். உனக்கு விதிக்கப்பட்டுள்ள மந்த்ரோப தேச சம்ஸ்காரங்கள் அவளுக்கு கிடையாது. அவளை மதிக்காதே...” பிராமண ஆணுக்கு சொல்லுவதாய் வந்த கருத்து இது.மனுவின் இத்தகைய கட்டுப்பாடுகளுக்கு ‘பூம் பூம்’ மாடுகள்போல தலையாட்டினார்கள் மற்ற வர்ணத்தவர்கள். வைதீக கட்டுப்பாடுகள் சர்வாதிகாரமாக விதிக்கப்பட்டன. “கடவுள் இப்படித்தான் செய்யச் சொல்லியிருக்கிறான். இதுபடி கேள். இல்லையேல் நீ பாபியாவாய்...” என மந்த்ரங்களால் மிரட்டப்பட்டனர் மக்கள்.பல நூறு வருடங்கள். ஒரு கிரிமினல் போன்றே மனுநீதி சமூக கட்டமைப்பை தன் கட்டுக்குள் வைத்திருந்தது. வைதீக கர்மாக்களை பிறருக்கு எடுத்துச் சொல்லி நீதி பரிபாலனம் செய்ய வேண்டிய பிராமணன் ஷத்ரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் எல்லோரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். இப்படிப்பட்ட ஒரு ‘சாஸ்திர ஏகாதிபத்ய’ சூழ்நிலையில்தான்... இன்றைய நேபாளத்திலிருந்து ஒரு குரல் புறப்பட்டது.“கடவுள் பெயரை சொல்லியும்... கர்மாக்கள் பெயரைச் சொல்லியும் சிந்தனை வளராத அப்பாவிகளை ஏமாற்றிப் பிழைக்கிறீர்களே? உங்களுக்கு இந்த உரிமையை யார் கொடுத்தது? கடவுளா? அவன் எங்கே இருக்கிறான்? வேதத்தை சாதத்துக்கு (பிழைப்புக்கு) பயன்படுத்தாதீர்கள். பேதம் வளர்க்காதீர்கள். கொடுமைதான் உங்கள் கொள்கை என்றால் வேதம் வேண்டாம். மனு வேண்டாம். கடவுள் வேண்டாம். கர்மாக்கள் வேண்டாம். மனித தர்மம் மட்டும் தான் வேண்டும்...” என அந்த சூழ்நிலையில் மிகமிக வித்தியாசமான குரல் தொனித்தது. அது புத்தர் குரல்.இன்றைக்கு அணு குண்டு வெடி சோதனைக்கே ‘புத்தர் சிரித்தார்’ என பெயர் வைக்கிறோம். அன்றைக்கு புத்தரே வெடித்தார் என்றால் விளைவுகள் என்ன? சிந்தனை செய் மனமே!*
பேசும் தமிழகம்

இந்து மதமும் பெண்களும் (பாகம் 1)


சில மாதங்களிற்கு முன்பு திருமண மந்திரங்கள் பற்றிய ஒரு பதிவை சில தளங்களில் எழுதினேன். இதையடுத்து நான் எழுதியது சரியா என்று ஒரு விவாதம் ஏற்பட்டது. ஒரு பத்திரிகையில் இந்த மந்திரங்கள் பற்றி எழுதிய போது, யரோ ஒரு பார்ப்பனர் "மந்திரங்கள் புனிதமானவை, அதை குற்றம் சொல்லக் கூடாது" என்று ஒரு கடிதம் மட்டும் எழுதியிருந்தார். வேறு எந்த விளக்கமும் எழுதவில்லை.ஆனால் கருத்துக் களங்களில் திருமண மந்திரங்கள் பற்றிய என்னுடைய கருத்து தவறு என்று சிலர் வாதிட்டார்கள். சில விளக்கங்களை முன்வைத்தார்கள். அவைகளுக்கு பதில் அளிக்க முனைந்த பொழுதே, அது நீண்டு இப்படியான ஒரு தொடருக்கு வித்திட்டது. அந்த வகையில் இந்தத் தொடருக்கு காரணமான திருமணங்களில் சொல்லப்படும் மந்திரங்கள் பற்றி முதலில் ஒரு முறை பார்ப்போம்.தமிழர்களைப் போன்று ஒரு இளிச்சவாயர்களை நான் எங்கும் காணவில்லை. தனக்குத் தெரியாத ஒரு மொழியில் எந்த ஒரு விடயத்தையும் யாரும் செய்ய மாட்டார்கள். அப்படிச் செய்வது என்றாலும், சொல்லப்படுவதன் அர்த்தத்தை புரிந்து கொண்டுதான் செய்வார்கள்.ஆனால் நாமோ பிறப்பில் இருந்து இறப்பு வரை மதத்தின் பெயரில் எமக்கு தெரியாத ஒரு மொழியிலேயே அனைத்து சடங்குகளையும் செய்து வருகிறோம். உண்மையில் இந்தச் சடங்குகளும், அதில் சொல்லப்படும் மந்திரங்களும் எம்மை இழிவுபடுத்துவதை நாம் உணர்ந்து கொள்வதும் இல்லை. உணர்ந்து கொள்ள விரும்புவதும் இல்லை.திருமணத்தின் போது சொல்லப்படும் சில மந்திரங்களை பார்ப்போம்'சோமஹ ப்ரதமோ விவிதே கந்தர்வோவிவித உத்ரஹ த்ரியோ அக்னிஸ்டே பதிதுரியஸ்தே மனுஷ்ய ஜாஹ'இந்த மந்திரம் மணமகளை நோக்கி சொல்லப்படுகிறது.நீ முதலில் சொமனுக்கு (சந்திரன்) உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய். இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம்.அதவாது மணமகள் ஏற்கனவே மூன்று பேருக்கு மனைவியாக இருந்தவளாம். இப்பொழுது நான்காவதாக ஒருவனுக்கு மனைவியாகப் போகிறார்களாம். அத்துடமன் அவள் எந்தக் காலத்தில் யாருக்கு மனைவியாக இருந்தால் என்று ஆபாசமான விளக்கங்கள் (ரோமம் வளரும் போது கந்தர்வனுக்கு....) வேறு இருக்கிறது.இதை பல பார்ப்பனர்களே இன்று ஒத்துக் கொள்கிறார்கள். ஆனால் மக்களை ஏமாற்றி தலையில் மிளகாய் அரைப்பதை மட்டுமே வழக்கமாக கொண்டுள்ள சிலர் வேறு அர்த்தம் சொல்வார்கள்.அதாவது மந்திரத்தில் உள்ள "பதி" என்ற சொல் கணவன் என்ற அர்த்தத்தில் சொல்லப்படுவது இல்லை. பாதுகாவலன் என்ற அர்தத்தில்தான் சொல்லப்படுகிறது. "முதலில் சந்திரன் அவளை பாதுகாத்தான், பின்பு கந்தர்வன் பாதுகாத்தான், பின்பு அக்னி பாதுகாத்தான்" என்று ஒரு விளக்கத்தை இவர்கள் சொல்வார்கள். பெண்ணின் உடலில் ஏற்படும் வளர்ச்சிக்கு அமைய இந்த மந்திரங்கள் அமைக்கப்பட்டது என்று "அறிவியல்" விளக்கம் வேறு தருவார்கள்.சிலர் இன்னும் ஒரு படி மேலே போய் சோமன், கந்தர்வன், அக்னி ஆகியோர் அந்தப் பெண்ணிற்கு தந்தையாக இருந்தார்கள் என்று சொல்வார்கள்.ஆனால் வேதங்களிலும் புராணங்களிலும் ஒரு பெண்ணிற்கு "பதி" என்பது அவள் கணவன் என்றுதான் சொல்லப்படுகிறது. அத்துடன் அதே வேதங்களிலும் புராணங்களிலும் "பொம்பிளைப் பொறுக்கிகளாக" சொல்லப்படுகின்ற சோமன், கந்தர்வன், அக்னி போன்றவர்களின் "பாதுகாப்பில்" தன்னுடைய மனைவி இருந்தாள் என்பது குறித்து எந்தக் கணவன் மகிழ்ச்சி அடைவான் என்ற கேள்வியும் இங்கு எழுகின்றது.திருமண மந்திரங்கள் இவற்றுடன் முடிந்து விடவில்லை. தொடர்ந்து வருகின்ற திருமண மந்திரங்கள் இவர்கள் சொல்கின்ற இந்த மோசடி விளக்கத்தை சுக்கு நூறாக உடைக்கின்றன.உதீர்ஷ்வாதோ விஷ்வாவஸேர் நம ஸேடா மஹேத்வாஅந்யா ப்ரபர்வ்யகும் ஸஞ்ஜாயாம் பத்யா ஸ்குஜஉதீர்ஷ்வாத பதிவதீ ஹ்யேஷா விஷ்வாவஸீந் நமஸ கீர்ப்பீரிடடேஅந்யா மிச்ச பித்ரு பதம வ்யக் தாகும் ஸதே பாகோ ஜனுஷா தஸ்ய வித்திஇந்த மந்திரங்களின் பொருள் என்னவென்று தெரியுமா?விஷ்வாவஸ் என்னும் கந்தர்வனே! இந்தப் படுக்கையில் இருந்து எழுந்திருப்பாயாக!உன்னை வணங்கிக் கேட்டுக் கொள்கிறோம். நீ வேறு கன்னிகையை விரும்புவாயாக! என் மனைவியை அவளுடைய கணவனுடன் சேர்த்து வைப்பாயாக!இந்தப் படுக்கையில் இருந்து எழுந்திருப்பாயாக! இந்தப் பெண்ணுக்கு கணவன் இருக்கிறான் அல்லவா! விஷ்வாவஸாகிய உன்னை வணங்கிக் கேட்டுக் கொள்கிறோம். தகப்பின் வீட்டில் இருப்பவளும், இதுவரை திருமணம் ஆகாத கன்னிகையை நீ விரும்பவாயாக! உன்னுடைய அந்தப் பங்கு பிறவியினால் ஆகிவிட்டது என்று அறிவாயாக!இப்பொழுது சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்! மணமகளிற்கு தந்தை ஸ்தானத்தில் இருந்து பாதுகாவலனாக விளங்கிய கந்தர்வனுக்கு அந்தப் பெண்ணின் படுக்கையில் என்ன வேலை?நான் சொன்னதை மீண்டும் சொல்கிறேன். சோமன், அக்னி, கந்தர்வன் போன்றவர்களை மணமகளின் கணவர்கள் என்றுதான் மந்திரம் சொல்கிறது. இவற்றை விட மணமகளை முப்பது முக்கோடி தேவர்களுக்கும் மனைவியாக்கி, பின்பு புரோகிதம் சொல்லும் பார்ப்பானுக்கு மனைவியாக்கி, இவற்றிற்கு எல்லாம் கணவனின் சம்மதம் பெற்று... இப்படி இந்த மந்திரங்கள் நீண்டு செல்கின்றன.இவைகள் இருக்கட்டும். வேறு சில திருமண மந்திரங்களை பார்ப்போம்.தாம்பூஷன் சிவதமாம் ஏவயஸ்வயஸ்ஸாம் பீஜம் மனுஸ்யா பவந்த்தீயான ஊரு உஷதி விஸ்ரயாதையஸ்யா முஷந்தஹா ப்ரஷரே பஷேபம்இதனுடைய அர்த்தம்: நான் அவளோடு உறவு கொள்ளும் பொழுது எமது பாகங்கள் பொருந்துவதற்கு தேவதைகளே நீங்கள் உதவ வேண்டும்.இன்னும் ஒரு மந்திரம்:விஸ்ணுர் யோனி கர்ப்பயதுதொஷ்டா ரூபானி பீமிசதுஆரிஞ்சது ப்ரஜாபதிதாதா கர்ப்பந்தாதுஇதனுடைய அர்த்தம், பெண்ணினுடைய அந்தரங்க பகுதி மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. மூன்று பாகங்களிலும் மூன்று தெய்வங்கள் இருந்து காவல் காக்கிறார்கள். (தெய்வங்களுக்கு வேறு வேலையே இல்லையா? )உறவின் பொழுது எல்லாம் சரியாக நடக்கிறதா என்று கண்காணிக்கின்ற வேலையையும் இவர்கள் செய்கிறார்கள்.ஒன்றிற்கு மூன்று தெய்வங்கள் பெண்ணின் அந்தரங்க உறுப்பில் இருந்து கொண்டு எல்லாம் சரியாக பொருந்துகிறதா என்று காவல் காக்கிறார்கள் என்றால், ஒரு பெண் வல்லுறவிற்கு உட்படுத்தம்படும் போது, அதை தடுத்தால் மிகப் பெரிய உபகாரமாக இருக்குமல்லவா? அதற்கும் ஏதாவது மந்திரங்கள் சொன்னால் நன்றாக இருக்குமே!இப்படியான மந்திரங்களை சொல்லி நடக்கின்ற திருமணங்களையே எமது தமிழர்கள் செய்கிறார்கள். இவைகளை விட்டு திருக்குறள் சொல்லி திருமணங்கள் செய்யுங்கள் என்றால், "கடவுள், மதம்" என்று அடம்பிடிக்கிறார்கள்.தமிழினத்தை எப்படி திருத்த முடியும்?திருமண மந்திரங்கள் ஒரு மணமகள் எவ்வளவு தூரம் இழிவுபடுத்தப்படுகிறாள் என்பதை பார்த்தோம். எம்மை ஈன்றெடுத்த தாயையே இந்த மந்திரங்கள் மிக மோசமாக கொச்சைப்படுத்துகின்றன என்பது உங்களுக்கு தெரியுமா?மணமுடிக்கப் போகின்றவளை ஏற்கனவே பலருக்கு மனைவியாக இருந்தவள் என்றும், அவர்களோடு படுக்கையில் இருந்தவள் என்றும் சொல்லி கொச்சைப்படுத்தும் திருமணங்களை பார்த்தோம்.இனி எம்மை ஈன்றெடுத்த தாயையே கொச்சைப் படுத்துகின்ற இரண்டு மந்திரங்களைப் பார்ப்போம்.மதத்தை தாய் தந்தையுடன் ஒப்பிட்டுப் பேசுகின்ற பலரை நான் கண்டிருக்கிறேன். அவர்களுடைய பார்வையில் மதம் என்பது தாய் தந்தை போன்றது. எப்படி நாம் தாய் தந்தையை மாற்ற மாட்டோமோ, எப்படி நாம் தாய் தந்தை மீது சந்தேகம் கொள்ள மாட்டோமோ அதே போன்று மதத்தை மாற்றவோ, அதன் மீது சந்தேகம் கொள்ளக் கூடாது என்பது அவர்களுடைய வாதம்.மதம் மாறுவது எனக்கும் ஏற்புடையது அன்று. ஒரு குப்பையில் இருந்து இன்னொரு குப்பைக்குள் போவது முட்டாள்தனமானது. மதங்கள் என்ற குப்பைகளை விட்டு வெளியே வந்த நல்ல காற்றை சுவாசிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து.ஆனால் மதம் மாறக் கூடாது, மதம் பற்றி கேள்வி எழுப்பக் கூடாது என்று சொல்வதற்காக தாய், தந்தையுடன் மதத்தை ஒப்பிடுவது மிக அபத்தமானது.மதம் குறித்து என்னுடன் வாதிட்ட ஒருவர் "அத்தாட்சிப் பத்திரம் காட்டினால்தான் நீங்கள் உங்களுடைய அப்பா, அம்மாவை நம்புவீர்களா?" என்றெல்லாம் ஆவேசமாக கேள்வியை எழுப்பினார். இன்னொருவர் நான் அப்பாவையே மாற்றி விட்டேன் என்று மறைமுகமாக என்னுடைய தாயை வசைபாடினார். இப்படியானவர்களைப் பார்த்து என்னால் பரிதாபப்படத்தான் முடிகிறது.இவ்வாறான கேள்விகளை மதவெறியுள்ளவர்களும் சிந்தனை வறட்சியுள்ளவர்களுமே கேட்பதால், அவர்களுக்கு உண்மையை புரிய வைப்பதும் மிகக் கடினமானதாகவே இருக்கிறது. ஆனால் இவர்கள் எல்லோரும் நாக்கைப் புடுங்கிக் கொண்டு சாவது போன்று இவர்களுடைய இந்த மதமே "அப்பன் பேர் தெரியாதவன்" என்று இவர்களை சொல்வதுதான் இதில் வேதனையான வேடிக்கை.எம்மவர்கள் சம்பிரதாயம் என்ற பெயரில் செய்கின்ற பல முட்டாள்தனமான விடயங்களில் இறந்தவருக்கு திதி கொடுப்பதும் ஒன்று. என்ன செய்வது? பிறப்பில் தொடங்கி இறப்பு வரை பார்ப்பான் வந்து சமஸ்கிருதத்தில் அசிங்கமாகவும் அருவருப்பாகவும் திட்டிவிட்டுப் போனால்தான் தமிழனுக்கு நிம்மதியாக இருக்கின்றது.இப்பொழுது இறந்தபின் நடக்கின்ற சடங்குகளில் சொல்லப்படும் இரண்டு மந்திரங்களைப் பார்ப்போம். முதலில் இறந்த தந்தைக்கு திவசம் செய்கின்ற போது சொல்லப்படும் ஒரு மந்திரம்,யன்மே மாதா பிரலுலோப சரதி அனனு விருதாதன்மே ரேதஹ பிதா விருங்க்தா ஆபுரண் யோபபத்யதாம் ரங்கராஜ சர்மணே ஸ்வாஹாரங்கராஜ சர்மணே அஸ்மது பித்ரே இதம் நமமகிருஸ்ண கிருஸ்ண கிருஸ்ண...இந்த மத்திரத்தின் அர்த்தம்:என்னுடைய அம்மா பத்தினியாக இல்லாது இருந்து, என்னை வேறு ஒருவருக்கு பெற்றிருந்தால், இந்த திவசத்திற்கு உரிமை கோரி என்னுடைய உண்மையான தகப்பனார் வருவார். அப்படி இல்லாது என்னுடைய அம்மாவின் கணவரே இந்த திவசத்தை பெறட்டும். இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம். அதாவது திதி கொடுப்பவனுடைய தாய் சில வேளைகளில் சோரம் போய் வேறு யாருக்காவது அவனைப் பெற்றிருக்கலாம் என்று இந்த மந்திரம் சொல்கிறது. உன்னுடைய அப்பா வேறு யாராவதாக இருக்கலாம், நீ அப்பன் பேர் தெரியாதவனாக இருக்கலாம் என்று இந்த "புனித" மந்திரம் சொல்கிறது.தந்தைக்கு திவசம் செய்கின்ற போதுதான் இப்படி என்று நினத்து விடாதீர்கள். இந்து மதம் தாய்க்கு செய்கின்ற திவசத்திலும் வஞ்சகம் வைக்கவில்லை. அம்மாவிற்கு திவசம் செய்கின்ற போது சொல்கின்ற ஒரு மந்திரம் இதுஎன்மே மாதா ப்ரவது லோபசரதிஅன்னவ் வ்ரதோ தன்மே ரேதஹபிதா வ்ருந்த்ததாம் ஆபுரண்யஹாஅவபத்ய நாம....என்னுடைய அம்மா யாருடன் படுத்த என்னைப் பெற்றாளோ தெரியவில்லை. ஒரு நம்பிக்கையில்தான் அவளை என்னுடைய அப்பாவின் மனைவியாகக் கருதுகின்றேன். அந்த அம்மாவிற்கு இந்த திவசம் போய் சேரட்டும்.உண்மையில் இந்த மந்திரம் அர்த்தம் அற்றது. தாய்க்கு கொடுக்கின்ற திதியில் தந்தை யார் என்ற கேள்வி எழத் தேவையில்லை. தந்தைக்கு திதி கொடுக்கின்ற போதாவது தாய் சோரம் போயிருந்து, அதனால் உண்மையான தந்தை வந்து விட்டால் என்னாவது என்ற கேள்வியோடு அந்த மந்திரத்தை தொடர்புபடுத்தலாம். ஆனால் தாயக்கு கொடுக்கும் திதியிலும் அவள் சோரம் போயிருக்கலாம் என்று சொல்வதற்கு அவசியமே இல்லை. ஆயினும் மந்திரம் அப்படித்தான் சொல்கிறது.எந்த மதத்தை தாய், தந்தையோடு ஒப்பிட்டு உறுதியாக நம்புகிறீர்களோ, அந்த மதத்தின் சம்பிரதாயங்களே உங்களுடைய அம்மாவை "நம்பத்தகாதவள்" என்கிறது. நடத்தை கெட்டவளாக இருக்கலாம் என்கிறது. நீங்கள் வேறு அப்பனுக்கு பிறந்திருக்கலாம் என்கிறது. சம்பிரதாயம் என்று பிதற்றுபவர்களுக்கும், மதத்தை பெற்றோரோடு ஒப்பிடுபவர்களுக்கும் இதை விட வேறு கேவலம் ஏற்படப் போவதில்லை.இந்த மந்திரங்கள் பற்றிய விவாதம் ஒன்றில் ஒருவர் என்னிடம் சில கேள்விகளை எழுப்பியிருந்தார். "இந்த மந்திரங்களை பார்ப்பனர்கள் தங்கள் வீட்டு நிகழ்வுகளில் சொல்ல மாட்டார்களா? அப்படிச் சொன்னால் தங்கள் வீட்டுப் பெண்களை கேவலப்படுத்துவது போன்று இல்லையா? பார்ப்பனர்கள் என்ன அவ்வளவு முட்டாள்களா?" இவ்வாறான கேள்விகளை அடுக்கினார்.இங்கேதான் நாம் சில விடயங்களை சற்று ஆழமாகப் பார்க்க வேண்டும். இந்த மந்திரங்களில் ஒரு விடயத்தை கவனித்திருப்பீர்கள். திருமண மந்திரங்கள் மணமகனை கொச்சைப்படுத்தவில்லை. மணமகளைத்தான் கொச்சைப்படுத்துகின்றன. ஈமச் சடங்கின் மந்திரங்கள் தந்தையை கொச்சைப்படுத்தவில்லை. தாயைத்தான் கொச்சைப்படுத்துகின்றன.இப்படி மந்திரங்கள் பெண்களைத்தான் கொச்சைப்படுத்துகின்றன. இது ஏன்? இந்து மதத்திற்கு பெண்ணின் மேல் அப்படி என்ன வெறுப்பு? இனி இதற்கான காரணங்களைப் பார்ப்போம்.மந்திரங்களில் பெண் இழிவுபடுத்தப்படுவதற்கு காரணம் என்ன என்பதை இனிப் பார்ப்போம். இந்து மதத்திற்கு பெண்கள் மீது வெறுப்பு ஏன் உருவானது என்பதை பார்ப்பதற்கு முன், இந்த மதத்தின் மற்றைய நூல்கள் பெண்களைப் பற்றி என்ன சொல்கின்றன என்பதையும் பார்த்து விடுவோம்.இந்த மத வேதங்களின் படி பெண் என்பவள் ஒரு கீழான பிறவி. சூத்திரர்கள் எப்படி கீழான பிறவிகள் என்று இந்து மத வேதங்களும் சாத்திரங்களும் சொல்கிறதோ, அதே போன்றுதான் பெண்களும் கீழான பிறவிகள். பல இடங்களில் சூத்திரர்களை விடவும் மிகக் கீழான நிலையில்தான் பெண்களை இந்து மத வேதங்களும் சாத்திரங்களும் வைத்திருக்கின்றனஇந்த இடத்தில் சுருக்கமாக இன்னும் ஒரு விடயத்தைப் பார்ப்போம்.இஸ்லாமியர்கள் குர்ரானையும் கிறிஸ்தவர்கள் பைபிளையும் கொண்டு இந்திய துணைக் கண்டத்திற்குள் நுழைந்த பொழுது, பார்ப்பனர்களுக்கு அதைப் போன்று எந்த நூலை தங்களுடைய பார்ப்பனிய இந்து மதத்தின் மதநூலாக காட்டுவது என்று தெரியவில்லை.பொதுவான இந்து மதம் என்கின்ற ஒன்று இல்லாத பொழுது, அதற்கு என்று எப்படி ஒரு பொதுவான மதநூல் இருக்க முடியும்?என்றாலும் பார்ப்பனர்கள் மனுதர்மத்தையும், பகவத்கீதையையும் இந்து மத "பைபிள்களாக" முன்வைத்தார்கள். பார்ப்பனிய மதம்தான் இந்து மதம் என்று பார்க்கின்ற போது இது ஒரு சரியான செயல்தான். மனுதர்மம், பகவத்கீதை போன்றவைகள் வேறு மொழிகளிலும் அச்சிடப்பட்டன.உண்மையில் இன்று வரை இந்து மதம் மனுதர்மத்தின் அடிப்படையில்தான் இயங்குகிறது. ஆலய வழிபாடுகள், விழக்கள், சடங்குகள் என்று அனைத்துமே மனுதர்மம் வகுத்துக் கொடுத்தன்படிதான் இயங்குகிறது. இதை விட முக்கியமாக அரசுகள் கூட மனுதர்மத்தின் அடிப்படையில் இயங்க வைக்கப்பட்டன.மனுநீதி சோழன் போன்ற சொற்களை கேள்விப்பட்டிருப்பீர்கள். மனுதர்மம்தான் மனுநீதி. மனுதர்மத்தின் படி பார்ப்பனர்களுக்கு கட்டுப்பட்டு, அவர்களின் ஆலோசனைப்படி ஆட்சி செய்த சோழனை "மனுநீதிச் சோழன்" என்று அழைத்தார்கள்.இந்த இடத்தில் இன்னும் ஒரு சிறு தகவல். பல நாடுகளை வென்று ஆசியாவின் பெரும் வல்லரசாக விளங்கிய சோழப் பேரரசு வீழ்ந்ததும் இந்த "மனுதர்ம" பார்ப்பனர்களினால்தான். பல போர்களைப் புரிந்ததால், பல பாவங்கள் சேர்ந்து விட்டதாக சோழ மன்னன் நம்பவைக்கப்பட்டான். அந்தப் பாவங்களைப் போக்குவதற்கு பார்ப்பனர்களுக்கு நிறைய தானங்கள் கொடுக்க வேண்டும் என்று பார்ப்பனர்களால் அவனிடம் சொல்லப்பட்டது. பார்ப்பனர்களுக்கு பொன்னும், பொருளும், நிலமும் வழங்கி, மிகுதிப் பணத்தில் கோயில்களும் கட்டி சோழப் பேரரசு தன்னுடைய பலத்தை இழந்து வீழ்ச்சி கண்டது. இதை பின்பு தனியாகப் பார்ப்போம்.இப்பொழுது மீண்டும் விடயத்திற்கு வருகிறேன்.மனுதர்மம் பலரால் கிழி கிழியென்று கிழிக்கப்பட்டு துவைத்துக் காயபோடப்பட்டு விட்டதால், தற்பொழுது மனுதர்மத்தை முன்னிறுத்துவதைக் குறைத்துக் கொண்டு பகவத் கீதையை முன்னிறுத்தி வருகிறார்கள்.இந்த மனுதர்மமாக இருக்கட்டும் அல்லது பகவத் கீதையாக இருக்கட்டும் அல்லது மற்ற வேதங்களாக இருக்கட்டும், பெண்ணைப் பற்றி என்ன சொல்கிறது? முதலில் மனுதர்மம் சொல்கின்ற சில விடயங்களைப் பார்ப்போம்.மனுதர்மமத்தின் தொடக்கம் ஏறக்குறைய பைபிள் போன்றுதான் இருக்கிறது. பைபிளைப் போன்றே உலகம் உருவான கதையில் தொடங்குகிறது. பின்பு ஒவ்வொரு வர்ணத்தினருடைய கடமைகள், குணங்கள், பாவங்கள், தண்டனைகள் என்று விரிகிறது.இதிலே 9வது அத்தியயாம் பெண்களைப் பற்றி பேசுகிறது. 9வது அத்தியாயத்திலே மனுதர்மம் பெண்கள் பற்றி சொல்கின்ற சில விடயங்களைப் பார்ப்போம்.பெண்கள் இளமைப் பருவத்தில் தந்தையாலும் பின்பு கணவனாலும், மூப்பில் மைந்தனால் காக்கப்படுபவர்கள். அவர்கள் சுயமாக இயங்கும் தன்மை உடையவர்கள் அல்லர்.(சுலோகம் 3)பெண்கள் கற்புநிலை அற்றவர்களாகவும், நிலையான மனம் அற்றவர்களாகவும், நட்புத்தன்மை அற்றவர்களாகவும் இயற்கையாகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள்.(சுலோகம் 15)இந்தச் சுபாவம் பெண்களைப் படைக்கின்ற போதே பிரம்மனால் கொடுக்கப்பட்டிருக்கிறது(சுலோகம் 16)படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோகசிந்தனை போன்றவைகள் பெண்களுக்காகவே படைக்கப்பட்டிருக்கிறது(சுலோகம் 17)பெண்களுக்கு என்று மந்திரங்கள் இல்லை. பெண்களுக்கு மனச்சுத்தி கிடையாது. பெண்களின் பாவத்தை போக்குவதற்கான மந்திர உபதேசமும் கிடையாது. பெண்கள் பொய்யைப் போன்று பரிசுத்தம் அற்றவர்கள்(சுலோகம் 18)பெண்கள் சுயமாக இயங்குகின்ற தன்மை அற்றவர்கள். பெண்கள் இயற்கையாகவே நிலையான மனம் அற்றவர்கள். கற்பு நிலை அற்றவர்கள். காமம், கோபம், துரோகம் அனைத்தும் பெண்களுக்காவே படைக்கப்பட்டிருக்கிறது. இவைகைள எல்லாம் பெண்களைப் படைக்கும் போது பிரம்மன் அவர்களுக்காக உருவாக்கியுள்ளார். இந்தப் பாவங்களை மாற்ற முடியாது. அதற்கான மந்திரங்கள் எதுவும் எல்லை. பெண்கள் மந்திரங்களை ஓதவும் கூடாது. மனுதர்மம் பெண்கள் பற்றிச் இப்படித்தான் சொல்கிறது.இதை விட ஒரு பெண் ஒவ்வொரு ஜாதிக்காரனுடன் உறவு வைத்தால் என்ன தண்டனை, கணவனுக்கு பணிவிடை செய்யாவிட்டால் என்ன தண்டனை என்று மற்றைய சுலோகங்கள் நீண்டு, பெண்களை எவ்வளவு அசிங்கப்படுத்த முடியுமோ அத்தனை தூரம் மனுதர்மம் அசிங்கப்படுத்துகிறது.இவை எல்லாவற்றிற்கும் மேலாக பெண் குழந்தைகளை பெறுவதையே குற்றம் என்றுதான் மனுதர்மம் சொல்கிறதுஒரு ஆண் எப்பொழுது தன்னுடைய மனைவியை "விவாகரத்து" செய்யலாம் என்று மனுதர்மம் விளக்குகிறது.மலடியான மனைவியை எட்டு வருடத்திற்குப் பின்பும், ஊனம் உள்ள பிள்ளையை பெறுபவளை பத்து வருடத்திற்கு பின்பும், பெண்களையே பெறுபவளை பதினொரு வருடத்திற்குப் பின்பும், தீங்கு சொல்பவளை உடனடியாகவே நீக்கி விட்டு வேறு விவாகம் செய்து கொள்க. நீக்கப்பட்ட மனைவியர்களுக்கு எந்தப் பொருளும் கொடுக்கத் தேவை இல்லை.(சுலோகம் 81)இந்து மத வேதங்கள், சாத்திரங்களின் படி பெண் இயற்கையாகவே கற்புநிலை அற்றவள். நிலையான மனம் அற்றவள். காமம் உடையவள். பெண் பிறப்பு ஒரு இழிவான பிறப்பு. அதை மந்திரங்களால் மாற்ற முடியாது. பெண் குழந்தையை பெறுவதே குற்றம்.இப்பொழுது ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள். திருமணத்தில், ஈமச் சடங்கில் பெண் கற்பு அற்றவள் என்ற அடிப்படையில் சொல்லப்படும் மந்திரங்களின் அடிப்படை புரிகிறது அல்லவா?ஆயினும் உங்களுக்கு வேறு சில கேள்விகள் எழக் கூடும். இந்தத் தொடரை தொடர்ந்து படிக்கின்ற போது அவைகளுக்கான பதில்களையும் நீங்கள் பெறுவீர்கள்.மனுதர்மத்தை நல்ல புத்தி உள்ள யாருமே ஆதரிக்க மாட்டார்கள். அதை படிக்கின்ற போது குமட்டிக் கொண்டு வரும். ஆனால் மனுதர்மச் சிந்தனைதான் பார்ப்பனியத்தின் அடிப்படைச் சிந்தனை ஆகும்.மனுதர்மத்தின் இன்னொரு பிரதியான பகவத் கீதை பெண்களைப் பற்றி என்ன சொல்கிறது என்பதை இப்பொழுது பார்ப்போம். பகவத் கீதையின் 9ஆவது அத்தியாயத்தில் சுலோகம் 32 இப்படிச் சொல்கிறது.மாம் ஹி பார்த்த வ்யபாச்ரித்ய யே அபி ஸ்யு பாப யோனயஸ்திரியோ வைச்யாஸ்ததா சூத்ராஸ்தே அபி யாந்திபராம் கதிம்அதாவது பெண்களும் சூத்திரர்களும் வைசிகர்களும் பாவ யோனியில் இருந்து பிறந்தவர்களாம். தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள பகவத் கீதைகளில் "பாவ யோனி" என்பதை "கீழான பிறப்பு", "இழி பிறப்பு" என்று மொழி பெயர்த்துள்ளார்கள். ஆங்கிலத்தில் நேரடியாகவே "born out of the womb of sin" என்று மொழி பெயர்த்திருக்கிறார்கள்.பகவத் கீதையின் பார்வையிலும் பெண் என்பவள் இழி பிறப்புத்தான். அவள் ஒரு பார்ப்பன வீட்டில் பிறந்திருந்தாலும், அது செல்லுபடியாகாது. கவனித்துப் பார்த்தீர்கள் என்றால் ஒன்று புரியும். சூத்திரர்களுக்கு மறுக்கப்பட்டுள்ள பெரும்பான்மையான உரிமைகள் பெண்களுக்கும் மறுக்கப்பட்டுள்ளன.முற்பிறப்பில் செய்த பாவத்தின் பயனாகத்தான் ஒருவன் பெண்ணாகவோ சூத்திரனாகவோ பிறக்கிறான் என்றுதான் இந்து மத வேதங்கள் சொல்கின்றன. அந்த வகையில் சூத்திரர்களை இழிவுபடுத்துகின்ற வேதங்கள், சாத்திரங்கள், மந்திரங்கள் போன்றவை பெண்களையும் இழிவுபடுத்துவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை."இந்து மதமும் பெண்களும்" என்ற தொடர் முடிந்த பிற்பாடு பகவத் கீதை பற்றியும் தொடராக எழுத இருப்பதால், தற்பொழுது பகவத் கீதையைப் பற்றி நான் அதிகம் எழுதாது மிகுதியை தொடர்கிறேன்.இந்து மதத்தைப் பற்றி அறிந்தவர்கள் ராமானுஜர் பற்றி அறிந்திருப்பார்கள். குறிப்பாக வைணவ சமய மக்களால் ராமானுஜர் கடவுளின் அவதாரம் என்று போற்றப்படுகிறார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பூணூல் போடுவதில் பாரதிக்கு அவர்தான் அனேகமாக முன்னோடியாக இருக்க வேண்டும்.தாழ்த்தப்பட்ட மக்கள் பலரை பூணூல் அணிவித்து பார்ப்பனர்களாக ராமனுஜர் மாற்றுவித்தார் என்று அவரைப் பற்றிச் சொல்வார்கள். அனைவரும் பெருமாளின் குழந்தைகளே என்றும், பெருமாள் பக்தர்களுக்குள் வேறுபாடுகள் கிடையாது என்றும் பிரச்சாரம் செய்தவராக கருதப்படும் ராமனுஜர் பல நூல்களை எழுதியுள்ளார். அவைகள் வைணவத்தின் வேதங்களாக கருதப்படுகின்றன.ரிக், யதூர் போன்ற வேதங்களில் இருந்து பெறப்பட்ட மந்திரங்கள் பெண்ணை இழிவுபடுத்தியதைப் பார்த்தோம். மனுதர்ம சாத்திரத்தை பார்த்தோம். பகவத்கீதையைப் பார்த்தோம். இப்பொழுது இந்து மதத்தின் புராணம் ஒன்றையும். பார்ப்போம்.ஒரு முறை இந்திரன் விஸ்வரூபன் என்பவனைக் கொன்று விட்டான். விஸ்வரூபன் ஒரு பார்ப்பனத் தந்தைக்கும் அசுர குல தாய்க்கும் பிறந்தவன். விஸ்வரூபன் ஒரு பார்ப்பனின் பிள்ளை என்பதால், அவனைக் கொன்ற இந்தரனுக்கு தோசம் உண்டாகி விட்டது.தோசம் பிடித்ததால் இந்திரன் மிகவும் விகாரமான உருவோடு மிக அருவருப்பாகக் காட்சி அளித்தான். தன்னுடைய தோசத்தை எங்கே இறக்கி வைக்கலாம் என்று அவன் தேடித் திரிந்தான்.இந்திரன் தன்னுடைய தோசத்தை எங்கே இறக்கி வைத்தான் தெரியுமா?பார்ப்பனன் ஒருவனுடைய மகனைக் கொன்றதால் இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோசம் பிடித்து விட்டது என்று கடந்த தொடரில் பார்த்தோம் அல்லவா? இப்பொழுது தன்னுடைய தோசத்தை இந்திரன் எப்படி தீர்த்துக் கொள்கிறான் என்று பார்ப்போம்.இந்திரன் மிகவும் விகார உருவத்தோடும் செல்வம், பொலிவு அனைத்தும் இழந்து அலைந்து கொண்டிருந்தான். தன்னுடைய தோசத்தை யாரிடமாவது இறக்கி வைத்தால், தன்னுடைய தோசம் போய்விடும் என்று இந்திரனுக்கு தோன்றியது.முதலில் இந்திரன் பூமாதேவியிடம் போனான். தன்னுடைய தோசத்தை பெற்றுக் கொள்ளும்படி வேண்டினான். பூமாதேவி தோசம் முழுவதையும் பெற்றுக் கொள்ள மறுத்து விட்டாள். வேண்டுமென்றால் தோசத்தில் ஒரு பகுதியை பெற்றுக் கொள்வதாக கூறினாள். பதிலுக்கு தான் கேட்கும் வரத்தை தரவேண்டும் என்று பூமாதேவி சொன்னாள்.இந்திரன் சம்மதித்து ஒரு பகுதி தோசத்தை பூமாதேவியிடம் இறக்கி வைத்தான். பூமிக்கு இப்படி பிரம்மஹத்தி தோசத்தில் ஒரு பகுதி வந்ததனால்தான் பூமியில் பல பாலைவனங்கள் உருவாகினதாம். தோசத்தை பெற்றுக் கொண்ட பூமாதேவி பூமி பிளந்தால் மீண்டும் ஒன்றாக சேருகின்ற வரத்தை கேட்டுப் பெற்றுக் கொண்டாள்.இந்திரன் அடுத்ததாக மரங்களிடம் போனான். மரங்களிடம் ஒரு பகுதி தோசத்தை கொடுத்தான். மரங்களிற்கு தோசம் வந்ததால்தான் அதில் இருந்து பசை வடிகிறதாம். மரம் தன்னுடைய கிளைகள் வெட்டுப்பட்டால் மீண்டும் முளைக்கும் வரத்தை கேட்டுப் பெற்றது.கடைசியாக இந்திரன் பெண்களிடம் போகிறான். தன்னுடைய நிலையை சொல்லி பெண்ணிற்கு தன்னுடைய மிகுதி தோசத்தை கொடுக்கிறான்.பெண் பிரம்மஹத்தி தோசத்தை கொண்டதால் என்ன ஆனது தெரியுமா? பார்ப்பனனின் மகனை கொலை செய்த தோசத்தை பெண்கள் பெற்றுக் கொண்டதால், அவர்களுக்கு மாதவிடாய் வரத் தொடங்கியது.தோசத்தை பெற்றுக் கொண்ட பெண் கர்ப்பமாய் இருக்கும் காலத்திலும் ஆண் சுகம் வேண்டும் என்ற வரத்தை கேட்டுப் பெற்றுக் கொண்டாள். வரத்தை இந்திரன் அருளினான். பொதுவாக மிருகங்கள் கர்ப்ப காலத்தில் ஒன்று சேராது. ஆனால் மனிதர்களுக்கு அப்படியில்லை. மனிதர்களால் கர்ப்பமாக இருக்கும் காலங்களிலும் சேர முடியும். இதற்கு காரணம் தோசத்தைப் பெற்றுக் கொண்ட பெண் அதற்கு ஈடாக இந்திரனிடம் பெற்ற வரந்தானாம்.இந்து மதம் என்று சொல்லப்படுகின்ற பார்ப்பனிய மதத்தில் ஒன்றை நீங்கள் கவனிக்கலாம். அந்த மதத்தில் உள்ள அனைத்து தத்துவங்களுமே பார்ப்பனர் உயர்ந்தவர் என்றும் மற்றவர் இழிபிறப்புகள் என்றும் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கொண்டிருக்கும். ஒரு பார்ப்பனனுக்கு தீங்கு செய்ததால்தான் பூமியில் பாலைவனங்கள் உருவாகின என்றும், மரங்களில் பாசை வடிகிறது என்றும், பெண்களுக்கு மாதவிடாய் வருகிறது என்றும் ஒரு செய்தியையும் இந்தப் புராணக் கதை சொல்கிறது.இந்த இடத்தில் ஒன்றை சுட்டிக்காட்ட வேண்டும். தொடரைப் படித்த சிலர் இந்து மதத்தின்படி ஆண்கள்தான் உயர்ந்தவர்களா என்று என்னிடம் கேட்டிருந்தார்கள். அது தவறு. பார்ப்பன ஆண்கள் உயர்ந்தவர்கள் என்பதுதான் சரி. இதைத்தான் இந்து மதம் அனைத்து வேதங்களிலும், சாத்திரங்களிலும், புராணங்களிலும் வலியுறுத்துகிறது. பார்ப்பன ஆண்களை தவிர மற்றைய அனைவரும் தாழ்ந்தவர்கள். இழி பிறப்புக்கள். பெண்கள் எந்த வர்ணமாக இருந்தாலும் இழிவானவர்கள்.மனுதர்மம், பகவத் கீதை, வேதங்கள், சாத்திரங்கள் இந்து மத இதிகாசங்கள் என்று அனைத்தும் பெண்கள் பற்றிச் சொல்கின்ற கருத்துக்களையே மேற்கண்ட புராணக் கதையும் சொல்கிறது.நாம் மனுதர்மத்திலும் பகவத் கீதையிலும் சில உதாரணங்களைப் பார்த்தோம். அவைகளின் கருத்துப் படி பெண் இழி பிறப்பானவள். காம குணம் உள்ளவள். கற்பு நிலையற்றவள்.ஏன் பெண் இழிபிறப்பானவள்? அவள் பிரம்மஹத்தி தோசத்தை பெற்றிருக்கிறாள்.பெண் காம குணம் உள்ளவளா? ஆம், அவள் மாதவிடாயால் மூன்று நாட்கள் ஆண்சுகத்தை பெற முடியாது என்று அறிந்து அதற்குப் பதிலாக, கர்ப்ப காலத்திலும் ஆண்சுகத்தை பெறுவதற்கு வரம் வேண்டியிருக்கிறாள்ஏற்கனவே நாம் பார்த்த சுலோகங்கள் சொல்கின்ற அதே கருத்தை இந்தக் கதையும் திருப்பிச் சொல்வதை கவனித்துப் பாருங்கள்.இப்படி பெண்களை இழிபிறப்புகளாகவும் காமப்பிசாசுகளாகவும் இந்து மதம் கருதுவதால்தான், மந்திரங்களில் பெண்ணிற்கு நிறையக் கணவர்கள் உண்டு என்றும், பெண் அவளுடைய பிள்ளையை வேறு ஆடவனுக்கு பெற்றிருக்கக்கூடும் என்று எழுதி வைத்திருக்கிறார்கள்.ஆனால் இந்து மத ஆச்சாரியார்களுக்கு பெண் மீது இத்தனை வெறுப்பு வந்ததற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும் அல்லவா? அது என்ன காரணம் என்ற கேள்வி உங்களுக்கு வரக் கூடும். வர வேண்டும். கேள்விகள் வந்தால்தான் நீங்கள் சிந்திக்கிறீர்கள் என்று அர்த்தம்.அதற்கு பதிலை சொல்வதற்கு முன்பு இன்னும் ஒரு விடயத்தை சொல்ல வேண்டும். பெண் பற்றிய பிரச்சனையால் இந்து மதத்தில் ஒரு பெரும் பிளவே ஏற்பட்டது. அதை முதலில் பார்ப்போம்.புராணங்களை கதைகள் என்று சிலர் சொல்வார்கள். ஆனால் அந்தக் கதைகளின் அடிப்படையில்தான் தமது சடங்குகளையும் விழாக்களையும் இந்துக்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.இந்து மதம் என்பது வேதங்கள், சாத்திரங்கள், புராணங்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது. திருமணத்தில் சொல்லப்படும் மந்திரங்கள் ரிக், யதூர் போன்ற வேதங்களில் இருந்து பெறப்பட்டவை. அதன் மூலம் இந்த வேதங்கள் பெண்களை இழிவுபடுத்துவதைக் கண்டோம்.மனுதர்ம சாத்திரத்தையும் உதாரணம் எடுத்துப் பார்த்தோம். பகவத்கீதையையும் உதாரணத்திற்கு எடுத்தோம். பின்பு ஒரு புராணக் கதையையும் உதாரணத்திற்கு எடுத்தோம். எல்லாமே பெண்களை இழிவுபடுத்துகின்றன. பெண் தாழ்ந்த பிறப்பு என்று சொல்கின்றன. கற்பு அற்றவர்கள் என்கின்றன. தோசம் உள்ளவள் என்கின்றன.நாம் பார்த்த புராணக் கதையின் படி பெண்ணினுடைய தோசம்தான் மாதவிடாயாக வெளிப்படுகிறது. பெண்கள் மாதவிடாய் காலத்தில் தீட்டு என்று சொல்லி தள்ளி வைப்பதன் காரணம் இதிலிருந்துதான் வந்தது.பெண்களை மூன்று நாட்களும் தள்ளி வைப்பதற்கு இன்றைக்கு சிலர் அசுத்தம், ஆரோக்கியம், அது, இது என்று விஞ்ஞான விளக்கங்கள் தருவார்கள். ஆனால் அவைகள் உண்மை இல்லை.மேற்குநாட்டுப் பெண்கள் வீட்டில் தள்ளி இருப்பது இல்லை. அங்கு யாரையும் எந்தக் கிருமியும் பாதிக்கவில்லை. இன்றைக்கு பெண்கள் தமது மாதவிடாய் காலங்களிலும் பல ஆயிரம் பேர் வேலை செய்யும் தொழிற்சாலைகளிற்கு சென்று வேலை செய்கின்றார்கள். அங்கும் யாரையும் எந்தக் கிருமியும் பாதிக்கவில்லை.ஆனால் இன்றைக்கும் மாதவிடாய் உள்ள ஒரு இந்துப் பெண்ணால் ஒரு கோயிலிற்கு சென்று வழிபட முடியாது. கோயிலில் யாரும் இல்லாத நேரத்தில் கூட போக முடியாது. தீட்டு என்று சொல்லி தடுத்து விடுவார்கள். மாதவிடாய் என்பது பெண்ணினுடைய தோசத்தின் வெளிப்பாடு என்று இந்து மதம் உறுதியாக நம்புவதே இதற்கு காரணம். ஒரு புராணக் கதை வாழ்க்கையில் நடைமுறைப் படுத்தப்படுவதற்கு இது ஒரு உதாரணம்.புராணங்களை வெறும் கதைகள் என்று தூக்கி எறியாது, அதை உண்மை என்று நம்பி தொடர்ந்தம் அவைகளை இந்து மதம் கடைப்பிடித்து வருவதாலேயே நாமும் அது குறித்து பேச வேண்டி உள்ளது. இந்து மதம் சொல்வதும் செய்வதும் அனைத்தும் பெண்களுக்கு எதிரானதே.இந்த மதத்தில் பெண்ணை வைத்து ஒரு பிளவு ஏற்பட்டதாக சொல்லியிருந்தேன் அல்லவா? அதை இப்பொழுது பார்ப்போம்.இந்து மதத்தில் பல பிரிவுகள் இருப்பதாக சொல்வார்கள். அதிலே சைவம், வைணவம் போன்றவைகள் முக்கியமானவை. சைவத்திலும் வீரசைவம், சிந்தாந்த சைவம் என்ற பிரிவுகள் இருக்கின்றன. வைணவத்தில் தென்கலை, வடகலை என்று பிரிவுகள் இருக்கின்றன.வீரசைவம், சைவசிந்தாந்தம் போன்ற பிரிவுகளுக்கிடையில் பெரியளவில் சச்சரவுகள் நடந்ததாக தெரியவில்லை. ஆனால் வடகலைக்கும் தென்கலைக்கும் நடந்த பிரச்சனைகள் உலகப் பிரசித்தம். இன்றுவரை பல இடங்களில் இவர்களுக்குள் சர்ச்சைகள், பகையுணர்வுகள் உண்டு. ஒரு பிரிவினர் மற்ற பிரிவினருக்குள் திருமணம் செய்து கொள்வது என்பது வெகு வெகு குறைவு.வடகலை, தென்கலை பிரிவுகளை நாமங்களை வைத்துத்தான் இனம் காண்பார்கள். வடகலையினர் "Y" வடிவத்திலே நாமம் கீறி நடுவில் ஒரு கோடு போடுவார்கள். தென்கலையினர் "U" வடிவத்தில் நாமம் கீறி ஒரு கோடு போடுவார்கள்.இந்த நாமம் பற்றி இரு தரப்பும் தருகின்ற விளக்கம் ஒன்றுதான். நாமத்தின் இரு கரையும் உள்ள கோடுகள் பெருமாளின் பாதங்களாம். இரண்டு கோடுகளும் பெருமாளின் பாதங்கள் என்றால், நடுவில் சிவப்புக் வண்ணத்தில் உள்ள குறி எதுவென்று உங்களுக்கு விளங்கும் என்று நினைக்கிறேன்.சைவர்கள் ஆண்குறியை லிங்கம் என்று வணங்குவார்கள். வைணவர்கள் நெற்றியில் பூசுவார்கள். இதை பின்பு சந்தர்ப்பம் வரும் போது தனியாகப் பார்ப்போம்.இந்த வடகலை, தென்கலை நாமம் பற்றிய ஒரு சர்ச்சை வெகுபிரசித்தம். சிறிரங்கம், காஞ்சிபுரம் பெருமாள் கோயில்களில் நின்ற யானைகளுக்கு எந்த நாமம் போடுவது என்ற பிரச்சனை வந்து அது நீதிமன்றத்தில் நீண்ட காலம் இழுபட்டது.வெள்ளைக்காரர் காலத்தில் தொடங்கிய வழக்கு இந்தியா சுதந்திரம் பெற்ற பின்பும் தொடர்ந்தது. சில நேரங்களில் ஒரு நாமத்திற்கு சார்பாக தீர்ப்பு வரும். ஆனால் அதற்குள் அந்த யானை இறந்து போயிருக்கும். இப்பொழுது புதிய யானைக்கு நீதிமன்ற தீர்ப்பின்படி நாமம் சாத்த மறு தரப்பு விடாது. அது பழைய யானைக்குத்தான் பொருந்தும், புதிய யானைக்கு எமது நாமத்தை சாத்தத்தான் வேண்டும் என்று மீண்டும் நீதிமன்றம் போவார்கள். அனேகமாக தீர்ப்பு வருவதற்கு முதல் அந்த யானையும் இறந்து போயிருக்கும்.இங்கிலாந்து நீதிமன்றங்கள் வரை இந்தப் பிரச்சனை போனது. வெள்ளைக்கார நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் இதை "Y,U" பிரச்சனை என்றுதான் அழைப்பார்கள். இப்படி பல வேடிக்கைகளையும் பகைகளையும் உருவாக்கிய இந்த "Y,U" பிரிவுகள் ஏன் உருவாகின என்று தெரியுமா? இதற்கு காரணம் பெண் என்றால் நீங்கள் நம்புவீர்களா?

நன்றி: வெப்ஈழம்

மனுதர்ம சாஸ்திரமும் தமிழ் மன்னர்களும்

மனு
வடமொழியில் தர்ம சூத்திரங்கள், தர்ம சாஸ்திரங்கள் என்பவை சட்ட நூல்களாகும். இந்நூல்கள் செய்யுள் வடிவுக்கு மாறிய பின்னர் அவை ஸ்மிருதிகள் எனப் பெயர் பெற்றன. இவற்றின் எண்ணிக்கை 128 என்று கானே என்ற வடமொழி அறிஞர் குறிப்பிடுவார். இவை அனைத்திலும் பரவலாக அறிமுகமான ஸ்மிருதி ‘மனுஸம்ஹிதை’, ‘மாணவ தர்ம சாஸ்திரம்’ என்றழைக்கப்படும் மனுதர்ம சாஸ்திரமாகும்.மனுவின் காலம்மனு என்பவர் எழுதியதால் இவ்வாறு அழைக்கப்படுவதாகக் கூறினாலும் இந்நூலாசிரியரின் பெயர் சுமதி பார்கவா என்று அம்பேத்கர் குறிப்பிடுகிறார். இந்நூலின் காலம் கி.மு.200க்கும் கி.பி.200க்கும் இடைப்பட்டது என்று பூக்லர் என்பவரும், கி.மு.170க்கும் 150க்கும் இடைப்பட்டது என்று அம்பேத்கரும் கருதுகின்றனர். கி.பி. முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டில் இந்நூல் இறுதி வடிவம் பெற்றதாக ஆர்.எஸ். சர்மா கருதுகிறார். எப்படியாயினும் மன்னர்களின் பிராமணியச் சார்புக்கான சட்ட நூலாக இது உருவாக்கப்பட்டுள்ளது என்பது உண்மை.மனுதர்மம் உருவான வரலாற்றுச் சூழல்மௌரியப் பேரரசின் படைத் தலைவனாக இருந்த புஷ்யமித்திரன் என்ற சாமவேதப் பிராமணன் நம்பிக்கைத் துரோகம் செய்து, மௌரிய மன்னனைக் கொலை செய்துவிட்டு சுங்க வம்ச ஆட்சியைத் தோற்றுவித்தான். இதன் பின்னர் பௌத்தம் கொடூரமான முறையில் ஒழிக்கப்பட்டது. கொலை செய்யப்படும் ஒவ்வொரு பௌத்த துறவியின் தலைக்கும் நூறு பொற்காசுகளை அவன் வழங்கினான். அசோகன் காலத்திலிருந்து தடை செய்யப்பட்டிருந்த வேதவேள்விகள் பெருகின. அத்துடன் வர்ணமுறை சாதியாக மாற்றப்பட்டது. இக்கால கட்டத்தில்தான் பிராமணர்களை, தெய்வநிலைக்கு உயர்த்திப் பாதுகாக்கும் மனுதர்மம் உருவாகியுள்ளது.மனு செய்த கொடுமைநான்கு வர்ண அமைப்பானது, இறுக்கமான ஒன்றாக மனுவுக்கு முன்னர் இருக்கவில்லை. வருணம் என்பது மாற்றிக்கொள்ளத்தக்கதாக நெகிழ்ச்சியுடன் இருந்தது. ஆனால் இதை இறுக்கமான சட்டங்களாக மனு மாற்றியதுடன், நான்கு வருணங்களுக்கு அப்பால் ‘அவருணர்கள்’ (வருணமற்றவர்கள்) என்ற புதிய பிரிவை உருவாக்கி, ‘சண்டாளர்கள்’ என்ற பெயரையும் அதற்குச் சூட்டி, தீண்டாமை என்ற கொடுமையை இப்புதிய பிரிவின் மீது சுமத்தினான்.தமிழ்நாட்டில் மனுதர்மம்தமிழ்நாட்டில் பல்லவப் பேரரசு உருவான பின்னர், மனுதர்மத்தின் இறுக்கமான சாதியப் பாகுபாடுகள் நுழைந்துவிட்டன. பல்லவர் காலச் செப்பேடுகளில் இடம் பெற்றுள்ள வடமொழி ஸ்லோகங்கள், சலுகை பெற்ற பிரிவாகப் பிராமணர்கள் உருவாகிவிட்டதைச் சுட்டுகின்றன. சோழப் பேரரசிலும், பிற்காலப் பாண்டியர் ஆட்சிக்காலத்திலும் இது மேலும் வளர்ச்சி பெற்றது.‘அறநெறி வளர, மனுநெறி திகழ’‘மறைநெறி வளர மனுநெறி திகழ’‘மனுநீதி முறை வளர’‘மனுநீதி தழைத் தோங்க’‘மன்னுயிர் தழைப்ப மனுவாறு விளங்க’‘மனுவாறு பெருக’என்றெல்லாம் தமிழ் மன்னர்களின் மெய்க்கீர்த்திகளில் இடம் பெறும் தொடர்கள் அவர்கள் எந்த அளவுக்கு, மனு ஸ்மிருதியைச் சார்ந்து நின்றார்கள் என்பதை வெளிப்படுத்துகின்றன.பதிமூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த திருக்குறள் உரையாசிரியர் பரிமேலழகர், அறம், ஒழுக்கம் என்பன குறித்து வரையறை செய்ய முற்படும்போது ‘அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழிதலும் ஆம். ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமச்சரியம் முதலிய நிலைகளினின்று அவ்வவற்றிற் கோதிய அறங்களின் வழுவாது ஒழுகுதல்’ என்று குறிப்பிடுகிறார்.பாண்டியர் காலக் கல்வெட்டொன்று. (கி.பி.1263), பிராமணர்கள் ஐவர், அடாத செயல்கள் செய்தபோது, அவர்களை எவ்வாறு தண்டிக்க வேண்டும் என்பதை,‘கீழ் சாதிகளைத்தண்டிக்கும் முறைமைகளிலே’ என்று குறிப்பிடுகிறது. சாதியின் அடிப்படையிலேயே நீதி வழங்கப்பட்டதை இதன் மூலம் அறியமுடிகிறது.எல்லாவற்றிற்கும் மேலாகக் கல்வி என்பது வேதக் கல்வியாகி, அதைப் பயிலவும் பயிற்றுவிக்கவும் மன்னர்கள் மானியம் வழங்கினர். இக்கல்வியைக் கற்பிக்கும் உரிமை பிராமணர்களுக்கு மட்டுமே உரியது. சத்திரியரும், வைசியரும் கற்பதற்கு மட்டுமே உரிமையுடையவர். இதன் விளைவாக உழைக்கும் மக்கள் பிரிவைச் சேர்ந்த சூத்திரர்களுக்கும் தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட மக்கள் பிரிவுக்கும், பெண்களுக்கும் கல்வி மறுக்கப்பட்டது.‘இம்மைப் பயன்தரும் கல்வியைச் சூத்திரர்களுக்குக் கற்றுக் கொடுக்கக்கூடாது’ என்று மனு நெறியானது கல்வியறிவு பெறுவதிலிருந்து அடித்தள மக்களை விலக்கி வைத்தது.ஆயினும் சூத்திரர் பிரிவைச் சேர்ந்தவர்களும் தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட பிரிவினரும், ‘செவி வாயாக நெஞ்சுகளனாகக்’ கொண்டு பாரம்பரிய தொழில் நுட்பத்தை மனதில் நிலை நிறுத்திக் கொண்டதுடன், வாய்மொழி வழக்காறுகளாக அடுத்த தலைமுறைக்குக் கொடுத்துச் சென்றனர். இதன் விளைவாகத்தான் தமிழ் உரைநடையானது வளர்ச்சியுறாத தேக்க நிலையை அடைந்தது. நினைவிலிருத்திக் கொள்ள எளிதாய் இருக்கும் என்பதால்தான் நமது சித்தவைத்திய நூல்களும், தச்சு வேலை, கப்பல் கட்டுதல் தொடர்பான நூல்களும் செய்யுள் வடிவில் அமைந்தன.ஏட்டுக் கல்வி மறுக்கப்பட்ட இம்மக்கள்தான் கவின்மிகு கோயில்களையும், வலுவான அணைகளையும், ஏரிகளையும் அன்றாடம் புழங்கும் பொருள்களையும், உணவு தானியங்களையும் தமிழ்ச் சமுதாயத்திற்கு வழங்கினர். சமூகத்தின் நிதியுதவியுடன் கல்வி கற்ற மேட்டிமையோர் சமூக நலனுக்காக எதையும் மேற்கொள்ளவில்லை. ஆனாலும் அவர்கள் ‘மாமனிதர்களாக’ காட்சியளித்தனர்.மனுவின் செல்வாக்குத் தமிழ் நாட்டில் இடம்பெற்றிருக்காவிட்டால், எண்ணும் எழுத்தும் சார்ந்த ஏட்டுக்கல்வியும், தொழில் நுட்பம் சார்ந்த அனுபவ அறிவும் இணைந்து செயல்பட்டிருக்கும். உடல் உழைப்பை இழிவானதாகவும், ஏட்டுக்கல்வியை உயர்வானதாகவும் கருதும்போக்கு உருவாகியிருக்காது. இதனால் இம்மண் சார்ந்த அறிவியலும் தொழில் நுட்பமும் வளர்ந்து நமக்கான ஒரு நவீனக் கல்வி உருப்பெற்றிருக்கும்."கீற்றில் ஆ. சிவசுப்பிரமணியன்"

இந்துவாக சாக மாட்டேன்! - தந்தை பெரியார்

சேரன் மாதேவி குருகுலப் பிரச்சினை உட்பட காங்கிரசில் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய பெரியாருக்கு ஆதரவுக் கரமாக திகழ்ந்த - காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான வரதராஜுலு நாயுடு, பிறகு ‘இந்து மகாசபையில்’ சேர்ந்து விட்டார் 1940 இல் திருவாரூரில் நீதிக்கட்சி மாநாட்டில் பெரியார், ‘இந்து மதம்’, ‘திராவிடர்கள்’ குறித்து நிகழ்த்திய உரைக்கு வரதராஜுலு நாயுடு வெளியிட்ட மறுப்புகளுக்கு பதிலளித்து, பெரியார் வெளியிட்ட அறிக்கை. பெரியார் நினைவு நாள் சிந்தனையாக வெளியிடுகிறோம்.திருவாரூர் மகாநாட்டைப் பற்றியும் என்னைப் பற்றியும் டாக்டர் வரதராஜுலு நாயுடு அவர்கள் பேரால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையை பல பத்திரிகைகளில் பார்க்க நேர்ந்தது. அதை முழு விரிவாக பொது மக்களும் அநேகமாய் பார்த்திருக்கக் கூடும். அதன் முக்கியமான சாரம் எனக்குப்பட்ட வரையில்,1. இந்தியாவையும், இந்து, பார்ப்பனர்கள் ஆகியவர்களையும் நான் தாக்கி பேசுவதாயும் அதற்காக ஹிந்துக்கள் என்று சொல்லப்படும் ஒரு கூட்டம் என்னை எதிர்க்க வேண்டுமென்றும் பிரிட்டிஷ் சர்க்கார் என் மீது நடவடிக்கை எடுத்து என்னை அடக்க வேண்டுமென்றும் இக்காரியங்கள் செய்யப்பட அவர் தன்னாலான எல்லாக் காரியங்களையும் செய்ய முனைந்து நிற்பதாயும் கூறுவது.2. திராவிட மக்களுக்கு ஆகவும் திராவிட நாட்டுக்கு ஆகவும் நான் செய்து வரும் தொண்டிற்கு எப்படியாவது கேடு ஏற்படும் படியாகச் செய்து திராவிட நாடும் திராவிட மக்களும் என்றென்றும் ஆரிய நாட்டிற்கும் ஆரியர்களுக்கும் அடிமையாகவே இருக்கும்படி செய்ய வேண்டுமென்ற கருத்தாய் இருக்க வேண்டுமென்பது.இவைகளுக்கு நான் சமாதானம் சொல்ல கடமைப்பட்டவனாய் இருக்கிறேன். ஏனெனில் திராவிட மக்கள் நலனுக்கு ஏற்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கத்திற்குத் தலைவனாயிருப்பதாலும் விவாத விஷயங்கள் அந்த ஸ்தாபனத்தின் மாநாட்டு விஷயங்களைப் பற்றியிருப்பதாலும் தோழர் நாயுடுவின் அறிக்கையால் பொது மக்களுக்குத் தப்பப்பிராயம் ஏற்படாமல் இருகக்ச் செய்ய வேண்டியவனாய் இருக்கிறேன்.டாக்டர் நாயுடு காட்டும் காரணங்கள்டாக்டர் நாயுடு அவர்கள் மேற்கண்ட சாரம் பொருந்திய தனது அறிக்கைக்குக் காரணமாக என் திருவாரூர் மாநாட்டுத் தலைமைச் சொற்பொழிவில் சில குறிப்புகளும் கருத்துகளும் எடுத்துக் காட்டியிருக்கிறார்.அவையாவன:-1. ஆதி திராவிடர்களுக்குத் தனி தொகுதி வேண்டும்.2. பார்ப்பனரல்லாதாருக்குத் தனித் தொகுதி வேண்டும்.3. முஸ்லீம்களும், பார்ப்பனரல்லாதாரும் ஒரே ஜாதி (திராவிடர்கள்) அவர்கள் சமயத்துறையிலும் அதிக வித்தியாசமில்லை.4. திராவிட நாட்டுக் கிறிஸ்தவர்களும் திராவிடர்களே. ஆதலால் இந்நால்வரும் ஒற்றுமையாய் இருக்க வேண்டும் என்பதாக நான் பேசியிருப்பவைகளை எடுத்துக் காட்டுகிறார்.மற்றும் அவர் அடுத்தாற்போல் காட்டும் காரணங்கள்:அ. திராவிடர்கள் இந்துக்களல்ல.ஆ. இந்து மதம் ஆரியர் மதம்.இ. திராவிடர் - ஆதி திராவிடர், திராவிட நாட்டிலுள்ள முஸ்லீம்கள், கிறி°தவர்கள் ஆகிய 4 கூட்டத்தினரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள். ஆதலால் இந் நால்வரும் ஒற்றுமையாய் இருந்து ஆரியத்தை எதிர்த்து நிற்க வேண்டும்.ஈ. இந்திய தேசியம் என்பது திராவிடர்களுக்குக் கேடானது.உ. திராவிட நாட்டில் இந்து மகாசபைக்கு வேலை இல்லை என்கின்றவைகளான இவைகள் எனது தலைமை உரையில் காணப்படுவது மற்றொரு காரணமாகும்.ஆம்; சென்ற வருஷத்திய சென்னை மாநாட்டு தலைமை உரையிலும் இவ்வருஷத்திய மாநாட்டு தலைமை உரையிலும் இக்கருத்து கொண்ட வாசகங்கள் இருக்கின்றன என்பதை நான் ஒப்புக் கொள்ளுகின்றேன்.இதற்கு பதினாயிரக்கணக்கான மக்களைக் கொண்ட அம்மாநாட்டில் ஏகமனதான பல தீர்மானங்களும் செய்யப் பட்டிருக்கின்றன. அவையாவன:-வரப்போகும் சென்சசில் திராவிடர்கள் தங்களை இந்தியர்கள் என்றோ இந்துக்கள் என்றோ சொல்லக் கூடாது. திராவிடர் என்றே சொல்ல வேண்டும். மதம் என்ன என்று கேட்டால் திராவிட மதம் என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் இந்து மதம் என்று சொல்லக் கூடாது. - என்பதாக ஒரு தீர்மானம் ஏகமனதாய் நிறைவேறி இருக்கிறது.மற்றும் - “இப்போது உள்ள இந்துலா என்னும் உரிமை சட்டமானது திராவிடர்களுக்கு ஏற்றதல்ல. அதை திராவிடர்களுக்குப் பயன்படுத்தக்கூடாது. திராவிட சமுதாயத்திற்கு ஏற்றதான திராவிட உரிமைச் (திராவிட லா) சட்டம் என்பதாக ஒன்று திருத்தி அமைக்கப்பட வேண்டும்” என்றும், “திராவிடர்களுக்கு மரியாதையாக ஸ்ரீ என்கின்ற ஆரிய வார்த்தையை ஏற்படுத்தி இருப்பதை எடுத்துவிட்டு திரு என்று போட வேண்டும் என்று சர்க்கார் உத்திரவு பிறப்பிக்கப்பட வேண்டும்” என்றும், “சமய ஒற்றுமை விஷயத்தில் இந்து முஸ்லீம் ஒற்றுமை என்கின்ற வார்த்தை நம் நாட்டுக்கு பொருத்தமற்றதாதலால் இனி மேல் திராவிடர் முஸ்லீம் ஒற்றுமை என்கின்ற பெயராலேயே சொல்லப்பட வேண்டும்” என்றும், “திராவிட மக்களுக்குள் இனி இந்து மகாசபை பிரசாரத்திற்கு இடம் கொடுக்காமலும் செவி சாய்க்காமலும் இருக்க வேண்டும்” என்றும், “ஆதி திராவிடர்களுக்கு ஆரிய மதப் பெயரான ஹரிஜனம் என்கின்ற பெயர் கூடாது, ஆதி திராவிடர்கள் என்றே அழைக்கப்பட வேண்டும்” என்றும், “ஆரிய சூழ்ச்சியாலும், ஆரிய சமய ஆதாரங்களாலும் திராவிட சமூகத்திடையே நுழைக்கப்பட்டுள்ள சமுதாய உயர்வு தாழ்வு வேற்றுமைகள் வேரோடு களைத்தெறியப்பட வேண்டும்.” “திராவிடர்களுக்குள்ளாகவே இன்று காணப்படும் உயர்வு தாழ்வுகளும் நீக்கப்பட வேண்டும்.”“இவைகள் காரியத்தில் நடைபெறுவதற்கு அவசியமான வழிகளை வகுத்து கையாளுவதற்கு வேண்டிய நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.”என்றும் ஆரிய திராவிட தேச சமய சமூக கலப்பினால் ஏற்பட்ட துன்பங்கள் ஒழிவதற்கு ஆக “திராவிடர்களின் கலை, நாகரிகம், பொருளாதாரம், அரசியல் ஆகியவைகள் காப்பாற்றப்படவும், முன்னேற்றமடைவதற்கும் ஆக திராவிட நாடாகிய சென்னை மாகாணத்தை நேரே பிரிட்டிஷ் சென்னை சம்மந்தம் இருக்கும்படியான ஒரு தனி நிர்வாக நாடாக பிரிக்கப்பட வேண்டும்” - என்றும் தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேறி இருக்கின்றன.ஆதலால் எனது கொள்கையும் எனது கட்சியின் கொள்கையும் டாக்டர் வரதராஜலு வாதங்கள் செய்தார்கள். இதற்கு காந்தியார் ஒவ்வொரு இடத்திற்கு ஒரு மாதிரி பதில் சொன்னார். திருப்பூரில் வருணாச்சிரம தர்மம் தான் தனது இந்துமத கொள்கையென்றும், வருணப்படிதான் அவனவன் வேலை செய்ய வேண்டும் என்று சொல்லி விட்டார். அப்போது ஒருவர், “அப்படியானால் நான் எந்தக் காலத்திற்குத்தான் இந்த சூத்திர இழிவிலிருந்து நீங்குவது” என்று கேட்டு விட்டார். அதற்கு காந்தியார், “ஏழு தலைமுறை பிராமண சம்பந்தமாகவே பிறந்தால் பிராமணனாகலாம்” என்று பதில் சொன்னார். அதனால் கோயமுத்தூரிலும் சிறிது கிளர்ச்சி ஏற்பட்டது.அங்கு காந்தியார், சர்.ஆர்.கே. ஷண்முகம் வீட்டில் இறங்கி இருந்தார். இந்த கிளர்ச்சியைப் பற்றி தோழர்கள் காந்தியாரும், சி. ராஜ கோபாலாச்சாரியாரும் பேசும்போது ஆச்சாரியார், “சண்முகம் செட்டியாரும் அந்தக் கொள்கைக்காரர்தான்” (இந்து மத விரோதிதான்) என்று சொன்னார். அதற்குக் காந்தியார் “என்ன சண்முகம் நீங்களும் அப்படியா?” என்று கேட்டார். அதற்கு ஆர்.கே. சண்முகம், ”ஆம்” என்றார். அப்படியானால் உங்களுக்கு யார் குரு என்றார். அதற்கு உடனே அவர், “ஈ.வெ.ராமசாமி தான்” என்றார். காந்தியாருக்கு தூக்கிப் போட்டதுபோல் ஆகி, “நம்ம ராமசாமி நேற்றல்்ல அவரை எனக்கு தெரிந்த காலம் முதலே அதாவது 1915 ஆம் வருஷம் முதலே அவர் லோகாயுதவாதி” (மெட்டீரியலிஸ்ட்) என்று சொன்னார். “அப்படியானால் அவரைக் கண்டு இது விஷயமாக பேச வேண்டும்” என்றார் காந்தியார். தோழர் எஸ். ராமநாதன் அவர்கள் காந்தியார் கூப்பிடுவதாக சொல்லி என்னை பெங்களூருக்கு அழைத்துப்போய் இதைப் பற்றி காந்தியாருடன் பேசவும் வைத்தார்.மற்றொரு சம்பவம் சுமார் 20 வருஷத்திற்கு முன்பு தோழர் வரதராஜுலு நாயுடு அவர்கள் தலைமையில் பேசும் போது “நான் சாவதற்கு முன் சடங்குகளை ஒழிப்பேன். ஒழிக்க முடியாவிட்டால் சாகும்போது இந்துவாக சாக மாட்டேன்; சடங்கில்லாத மதக்காரனாகத்தான் சாவேன்” என்றும் சொல்லி இருக்கிறேன். ஆதலால் இந்துமத எதிர்ப்புக்கோ இந்துஸ்தான் எதிர்ப்புக்கோ ஆரியர் திராவிடர் என்கின்ற உணர்ச்சிக்கோ பார்ப்பன துவேஷம் காரணமல்ல என்பதையும் மக்கள் மீது உள்ள பரிதாபமே காரணம் என்பதையும் இவற்றிலிருந்தாவது மக்கள் உணர்வார்கள் என்று கருதுகிறேன்.நாயுடு அவர்கள் “நாயக்கர் இந்துக்களுக்கு எதிராக முஸ்லிம்களுடன் சேர்ந்து கொண்டிருக்கிறார்” என்று சொல்லுகிறார். என்றுமே “இந்துக்களுக்கு எதிரான அபிப்பிராயங்களையே கொண்டு இருக்கிறவன்” ஆன “நான் முஸ்லிம்களோடு சேர்ந்திருக்கிறேன்” என்று நாயுடுகார் சொல்லும் வார்த்தைக்கு ஒன்றும் அர்த்தம் இருப்பதாய் எனக்கு விளங்கவில்லை. ஏனெனில் அவுரங்கசீப்பை சேர்ந்த ஜின்னாக்கள் வெகு நூற்றாண்டுகளாகவே இந்துக்களுக்கு விரோதியாகவும் இருந்தார்கள் என்றால் ராவணனைச் சேர்ந்த ராமசாமிகள் அதற்கு முன்பு இருந்தே இந்துக்களுக்கு விரோதிகளாய் இருக்க வேண்டியவர்களல்லவா?இந்நிலையில் இருவருக்கும் இந்துக்களுக்கு விரோதமான ஒரு இடம்தான் இருக்க முடியுமே தவிர வேறு வேறு இடம் எப்படி இருக்க முடியும்? இது மாத்திரமா? ஆதி திராவிடருக்கும், கிறஸ்தவர் களுக்கும் எனக்கும்கூட ஒரு இடம் தானே இருக்க முடியும்? நான் எதற்காக முஸ்லிம்களையோ கிறிஸ்தவர்களையோ, ஆதி திராவிடர்களையோ விட்டு விலகி இருக்க வேண்டும் என்பது எனக்கு விளங்கவில்லை. அரேபியாவிலும் ஆப்கானிஸ்தானத்திலும் ஈஜிப்டிலும் இருக்கும் முஸ்லிம்களுடன் நான் சேர்ந்து கொண்டு அவர்களை இந்நாட்டுக்கு வந்து கொடி போடும்படி நான் கூப்பிட்டால் அது தவறாகலாம்.திராவிட நாட்டிலே இருக்கும் திராவிட இனத்தில் இருக்கும் முஸ்லீம்களுடன் நான் ஆரிய வர்த்தத்திலே இருக்கும் ஆரிய சமயத்தவரான இந்துவுக்காக சண்டை போட வேண்டுமென்று நாயுடு கருதுகிறாரா என்பது எனக்கு விளங்கவில்லை.மற்றும் “இந்து மகாசபையை நாயக்கர் எதிர்க்கிறார்” என்கிறார். இங்கு சில வரிகளுக்குக் கீழாகவே நாயுடுகார்,“இந்து மகாசபை மாநாடுகள் கூட்டி ஜஸ்டிஸ் கட்சியினுடையவும் லீக்கினுடையவும் கோரிக்கைகளை எல்லா வகையாலும் எதிர்த்து நிராகரிக்க வேண்டும்” என்கிறார். ஆகவே இப்படிப்பட்ட காரியத்திற்காக நிறுவப் போகும் இந்து மகாசபையை எதிர்க்காமல் அதற்கு நான் இடம் கொடுக்க வேண்டியது அவசியந்தானா? இதற்காக கூட்டப்படும் மாநாடு ஒழுங்கான மாநாடு ஆகுமா? என்று பொது மக்களைக் கேட்கிறேன்.மற்றும் நாயுடு அவர்கள், “பார்ப்பனர் பார்ப்பனர் அல்லாதார் என்கின்ற தர்க்கம் திராவிடர் ஆரியர் என்கின்ற யுத்தமாக மாற்றப்படுகிறது. சரித்திரத்திலேயே இந்தக் கொள்கைக்கு ஆதாரம் இல்லை” என்று தனது அறிக்கையில் எழுதுகிறார்.இது நாயுடு ஏதாவது தேச ஜாதி (தேசிய) சரித்திரங்களைப் பார்த்து இப்படி எழுதுகிறாரா அல்லது “பூனை கண்ணை மூடிக் கொண்டு பால் குடிக்கிறது” என்று பழமொழி போல் உலக மக்களை மூடர்கள் என்று கருதிக் கொண்டு இப்படி எழுதுகிறாரா என்பது நமக்கு விளங்கவில்லை.ராவணன் கதையையும், காலத்தையும் ஞாபகப்படுத்திக் கொண்டு தனது வாதத்திற்காக பயன்படுத்திக் கொண்ட நாயுடுகாருக்கு ஆரியர் - திராவிடர் என்பதற்குச் சரித்திரத்திலேயே இடம் காணப்படவில்லை என்றால் அவர் எப்படிப்பட்டவர் என்பதை பற்றி பொது மக்கள் தான் ஒரு முடிவுக்கு வரவேண்டும்.ராமேஸ் சந்திரதத் எழுதிய “புராதன இந்தியா”, “பண்டைய இந்தியாவின் நாகரீகம்”,ராமேஸ் சந்திர மசும்தார் எழுதிய “பூர்வீக இந்திய சரித்திரமும் நாகரீகமும்”, சுவாமி விவேகானந்தர் “ராமாயணம்” என்னும் தலைப்பில் பேசிய பேச்சு, 1922 கேம்பிரிட்ஜ் பிரசுரித்த ‘பழைய இந்தியாவின் சரித்திரம்’, ராஜகுமார் முக்கர்ஜி எழுதிய ‘இந்து நாகரீகம்’, ஜேம்ஸ்மர்ரே எழுதிய அகராதி, பண்டர்கார் கட்டுரைகள், டாக்டர் கிருஷ்ணசாமி அய்யங்கார் எழுதிய “தென்னிந்தியாவும் இந்திய கலையும்”,பி.டி. ஸ்ரீனிவாசய்யங்கார் எழுதிய “இந்திய சரித்திரம்”, ஜெகதீச சந்தர்டட் எழுதிய “இந்தியா அன்றும் இன்றும்”, ஏ.சி. தாஸ் எழுதிய “வேத காலம்”, சி.எஸ். சீனிவாசாச்சாரியார் எழுதிய “இந்திய சரித்திரம்”, “இந்து இந்தியா”, எச்.ஜீ. வெலஸ் எழுதிய “உலக சரித்திரம்”,மேலும் சகல கலா பொக்கிஷம் என்னும்் “நியு ஏஜ் என்சைக்ளோ பீடியோ”,சி.ஜெ. வர்க்கி (மாஜி மந்திரி) எழுதிய “இந்திய சரித்திர பாகுபாடு”, ஹென்றி பெரிஜ் 1865-ல் எழுதிய “விரிவான இந்திய சரித்திரம்”, இ.பி. ஹாவெலஸ் எழுதிய “இந்தியாவில் ஆரிய ஆட்சி.” ஜி.எச். ராலின்சன் எழுதிய “இந்தியா”.நாகேந்திர நாத் கோஷ்் எழுதிய “இந்திய ஆரியரின் இலக்கியமும் கலையும்”,வின்சென்ட் ஏ. ஸ்மித் எழுதிய “ஆகஸ்போர்ட் இந்திய சரித்திரம்”, “இம்பிரியல் இந்தியன் கெஜட்”, சர் வில்லியம் வில்சன் “இந்திய மக்களின் சரித்திரம்”,ராகோசின் எழுதின “வேத கால இந்தியா”, பால்மாகின் கவர்செல் எழுதிய “புராதன இந்தியா நாகரீகம்”, சர். என்றி ஜான்ஸ்டன் எழுதிய “இந்தியாவில் அன்னியர்”,இவைகள்அறிவு, ஆராய்ச்சி திறம், கல்விப் பட்டம் பெற்ற ஆங்கிலேயராலும் வங்காளிகளாலும் பல ஆரியர் (பார்ப்பனர்)களாலும் எழுதப்பட்டவைகளாகும். திராவிடர்களால் எழுதிய எதையும் இங்கு குறிப்பிடவில்லை. இதுபோல் இன்னமும் நூற்றுக்கணக்கான ஆராய்ச்சி நிபுணர்கள் எழுதிய புத்தகங்கள் ஆதாரங்கள் கன்னிமேரா லைபெரரியில் மாத்திரம் இருக்கின்றன. சாவகாசப்பட்டால் நாயுடுகார் தயவு செய்து போய்ப் பார்த்துக் கொள்ளலாம்.மற்றும் “பல யுகங்களாகத் திரண்ட ஞானத்தின் அஸ்திவாரத்தைக் கொண்டது இந்துக் கலாச்சாரம்” என்று நாயுடு எழுதுகிறார். பல யுகம் என்பதே ஒரு புரட்டான வார்த்தையாகும். ஏனெனில் இந்து கலாச்சாரக் கதைகள் அல்லது இந்து சரித்திரங்களிலுள்ள விஷயங்களைப் பார்த்தால் அவை ஒரு யுகத்தில் நடந்த விஷயம் பல யுகங்களாக நடந்தவைகள் என்று காணப்படும். ரிஷியோ முனியோ ஆகிய ஒரு மனிதன் பல யுகங்களில் நடந்த பல சம்பவங்களில் இருந்தனவாக இருப்பான்.அகஸ்தியர், நாரதர், விசுவாமித்திரர், பராசாரர், வசிஷ்டர், யக்கியவல்கியர் முதலிய நபர்கள் தான் கருதி, °மிருதி ஆகியவைகளுக்கு ஆதார புருஷர்களாக இருக்கிறார்கள். இவர்களில் எவருடையதும் பகுத்தறிவுக்குச் சம்பந்தப்பட்டது அல்ல. ‘அராபியன் நைட்ஸ்’ போன்ற கதையாகவே ஒவ்வொரு விஷயமும் காணப்படும்.மற்றும் இந்து மதம், இதிகாசம் ஆகியவைகளும் பகுத்தறிவுக்கு பொருத்தமற்றதாகவே இருக்கும். ‘இந்து’ இந்து கலாச்சாரம், இந்து சமயம், இந்தியா என்கின்ற வார்த்தைகள் எந்த இந்து ஆதாரங்களிலாவது இருப்பதாகக் காட்ட முடியுமா என்று கேட்கிறேன்.இந்து என்கின்ற வார்த்தை ஒரு நாட்டான் என்பதைக் குறிக்கிறதா? ஒரு மதத்தான் என்கின்றதைக் குறிக்கின்றதா? என்று கேட்கின்றேன்.

ஹெட்கேவர் என்ற தெருப்பொறுக்கி!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முதல் தலைவர், 'சர்சங்சாலக்' என்றுஏற்றிப் போற்றப்படும் அந்த 'கேஷவ பல்ராம் ஹெட்கேவர்' யார் என்ற விபரங்களை இங்கே ஆராய்வோம்.
1889-ம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி, நாக்பூரில் பார்ப்பன அர்ச்சகர் ஒருவருக்குப் பிறந்த மூன்றாவது மகன்தான் ஹெட்கேவர்! தலைமுறை தலைமுறையாக அர்ச்சகர் தொழிலில் ஈடுபட்டு வந்தது இந்தக்குடும்பம் என்பதிலிருந்தே பார்ப்பன வர்ணாஸ்ரம வெறித் தனத்தின் சூழலில் அவர் வளர்க்கப்பட்டவர் என்ற உண்மை தெளிவாகவே விளங்கும்.
அதற்கு பல தலைமுறைகளுக்கும் முன்பே ஆந்திர மாநிலத்தில் 'குந்த்குர்த்தி' என்ற கிராமத்தில் வாழ்ந்து வந்த ஐதராபாத் நிசாம் மன்னர்களின் ஆட்சியை எதிர்த்துப் போராட முடியாமல், வெறுப்படைந்து நாக்பூருக்கு வந்த குடும்பமாகும் அது!
எனவே, பார்ப்பன வர்ணாஸ்ரம வெறி, முஸ்லீம்களின் எதிர்ப்பு என்ற உணர்வுள்ள குடும்ப சூழ்நிலையில் வளர்ந்தவர் ஹெட்கேவர்.
1902-ம் ஆண்டில், ஹெட்கேவரின் பெற்றோர்கள் இறந்த பிறகு, அவரது சகோதரர் மகாதேவ சாஸ்திரி செய்து வந்த தொழிலும் பார்ப்பன புரோகிதர் தொழில்தான்!
'மூஞ்சி' ஆர்.எஸ்.எஸ். தோற்றுவித்த ஐவர் குழுவில் ஒருவர். இந்து ராஷ்டிரத்தை வன்முறையின் மூலம் ஏற்படுத்த வேண்டும் என்பதில் உறுதியான துடிப்பு கொண்டிருந்தவர் இந்த மூஞ்சி!
ஹெட்கேவருக்கு நல்ல உடல் வலிவு உண்டு; குத்துச் சண்டை, நீச்சல் பயிற்சிகளில் மிகுந்த ஆர்வம் இருந்தது. தெருச் சண்டைகளில் அவர் வீரராகத் திகழ்ந்தார். எனவே, அக்கால அரசியலுக்கு இவர் சரியானவர் என்ற முடிவுக்கு வந்து, அவரை உற்சாகப் படுத்தினார் 'மூஞ்சி.'
ஆர்.எஸ்.எஸ். ஒரு வன்முறைக் கும்பலாகவும், பார்ப்பன வெறி அமைப்பாகவும், முஸ்லீம்கள் எதிர்ப்பு சக்தியாகவும் செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டுகள் கல்லில் செதுக்கப்பட்ட உண்மைகளே என்பதற்கு ஹெட்கேவர் வளர்ந்த, உருவான சூழ்நிலைகளே சரியான சான்றுகளாகும்.
"இந்து ராஷ்டிரம் என்ற இந்தக் கொள்கையைச் சொன்ன அந்த முட்டாள் யார்?""அதைச் சொன்ன முட்டாள் இந்த கேஷவ்பல்ராம் ஹெட்கேவர்தான்."
ஆர்.எஸ்.எஸ். கூட்டத்திலே, இளைஞன் ஒருவன் கேட்ட கேள்விக்கு ஹெட்கேவர் மேற்கண்ட பதிலை அளித்தார்!
அவரைப் பொறுத்தவரை தன்னுடைய 'ஆளுமை சக்தியால்' தொண்டர்களை கட்டாயப்படுத்தி தனது அமைப்புக்கு இழுத்தவரே தவிர நியாயப்பூர்வமான அறிவு வாதங்களை எடுத்து வைத்து விவாதித்து அதன் மூலம் தனது அமைப்புக்கு பலம் சேர்த்தவர் அல்ல!
இந்து ராஷ்டிரம் என்பது என்ன என்ற கேள்விக்கு, விவாத பூர்வமான விளக்கங்கள் எதையும் தராமல், தன்னையே முன்னிலைப்படுத்தி, நிலைமையை சமாளித்தார் ஹெட்கேவர்! (இந்த உரையாடலை, ஹெட்கேவரின் வாரிசு கோல்வாக்கர் எழுதிய 'ஸ்ரீ குருஜி சம்ஹாரதர்சன்' என்றஇந்தி நூலில் 5-வது அத்தியாயத்தில் 22-23 பக்கங்களில் குறிப்பிடுகிறார்.)
தொடர்ந்து கோல்வாக்கர் அதே நூலில் மேலும் எழுதுகிறார்...
"நான்தான் அந்த முட்டாள் என்ற ஒரு வார்த்தைக்கு மேல், அவர் பேசவில்லை. எந்த வாதத்தையும் வைக்கவில்லை. கேட்டவரை சமாதானப் படுத்திவிடும் நியாயங்களையும் சொல்லவில்லை. அதிலே மிகவும் ஆச்சரியம் என்னவென்றால், அவர் அந்த ஒரு வார்த்தையை சொன்னவுடனேயே, அங்கு கூடியிருந்த எல்லா உறுப்பினர்களும் சமாதானமடைந்து, தாங்கள் 'சுயம் சேவக்காக' உறுதி எடுக்க முன் வந்தனர்."
இப்படி குருபக்தியோடு, குருவின் கருத்துக்களில் சீடர்கள் கேள்வி கேட்பதே குற்றம் என்ற முறையோடுதான், ஹெட்கேவர் இந்த அமைப்பை நடத்திச் சென்றிருக்கிறார்! சிந்தனைகளுக்கு விளக்கங்களுக்கு அங்கே இடமில்லை! எனவேதான் 'நீங்கள் டாக்டர்ஜீயைப் பற்றி (ஹெட்கேவர்) தெரிந்து கொள்ள வேண்டுமா?ஆர்.எஸ்.எஸ். பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். ஆர்.எஸ்.எஸ். பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா? டாக்டர்ஜீ பற்றி தெரிந்து கொள்ளுங்கள்... என்று ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
"மரியாதைக்குரிய டாக்டர்ஜீ அவர்களும், ஆர்.எஸ்.எஸ்சும் ஒன்றுக்கொன்று இணைந்தது. டாக்டர்ஜீ வாழ்க்கையைப் படித்தால் அதிலிருந்து கிடைக்கும் எழுச்சி உணர்வுகளால் ஆர்.எஸ்.எஸ்.சின் முறையான வளர்ச்சியை தெரிந்து கொள்ள முடியும்." என்கிறார் மறைந்த ஆர்.எஸ்.எஸ். முன்னால்தலைவர் தேவரஸ் (ஆதாரம்: சி.பி. பிஷிகார் எழுதிய நூல் பக்கம் - 5)
எனவே ஹெட்கேவர் வாழ்க்கை வரலாற்று விவகாரங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தால், அது ஆர்.எஸ்.எஸ்.தன்மையை பிரதிபலிக்கும் என்பதால், நாமும் அந்த ஆராய்ச்சியில் சற்று ஆழமாக இறங்குவோம்!
மெட்ரிகுலேஷன் தேர்வை நாக்பூரில் முடித்துவிட்டு மருத்துவப் படிப்பு படிக்க (ஹெட்கேவர்) கல்கத்தா போகிறார். இந்து மத வெறியரான அதே 'மூஞ்சி' என்ற பார்ப்பனர்தான் அவருக்கு இப்போது உதவி புரிகிறார். வன்முறை இயக்கங்களில் மிகவும் ஆர்வம் கொண்ட ஹெட்கேவர், கல்கத்தாவில் போய் படித்தால் இத்தகைய அமைப்புகளோடு தொடர்பு கொள்ள முடியும் என்று விரும்பினார். மராட்டிய மன்னர் சிவாஜியும், திலகரும் இவரின் ஞானத் தந்தைகள்!
1910-ம் ஆண்டிலிருந்து 1915-ம் ஆண்டு வரை கல்கத்தாவில் மருத்துவக் கல்வி பயின்றபோது, இவர் தங்கிய விடுதிதான் மாணவர்களின் அரசியல் அரங்கங்களாக செயல்பட்டது. பல திவீரவாத இயக்கங்கள், புரட்சி இயக்கங்களைச் சார்ந்தவர்களும் அங்கே வருவதுண்டு.
இந்த கல்கத்தா வாழ்க்கைப் பற்றி, ஹெட்கேவரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கிடும், ஆர்.எஸ்.எஸ்சின் அதிகாரபூர்வமான, சி.பி. பிஷிகார் என்பவரால் எழுதப்பட்ட நூல் பக்கம்-13 கீழ்க்கண்டவாறு கூறுகிறது.
"கல்கத்தா சென்றவுடன் ஹெட்கேவர் 'அனுசிஹிலன் சமிதி' என்ற அமைப்பின் நெருக்கமானஉறுப்பினராக சேர்த்துக் கொள்ளப்பட்டார். ஆபத்துக்கள் நிறைந்த சில முக்கியமான வேலைகள்அவருக்குத் தரப்பட்டன. புரட்சியாளர்களுக்கு பயங்கரமான ஆயுதங்களை ரகசியமாக கொண்டு சென்றார்."என்று கல்கத்தா போன உடனேயே இவர் ஒரு புரட்சிக்காரராக மாறிவிட்டது போல, ஒரு தோற்றத்தைத்தந்து எழுதியிருக்கிறார்கள்.
ஆனால், உண்மை என்னவென்றால் வேறாக இருக்கிறது!
ஜே.ஏ. குர்ரான் (J.A.Cruuan) எழுதிய "Militant Hinduism in Indian Politics" நூலில்பக்கம்-13-ல் உண்மையை உடைத்துக் காட்டுகிறார்!
"கல்கத்தாவுக்கு ஹெட்கேவர் போனவுடன், புரட்சி இயக்கங்கள் அவருக்கு முக்கியத்துவம் எதுவும்தரவில்லை. கல்கத்தாவில் வாழ்ந்த காலத்தில், அவர் சிறைக்குச் சென்றதாக எந்த ஆதாரமும் கிடையாது. ஆனால், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள், பிரிட்டிஷார் அவரை போலீஸ் காவலில் வைத்திருந்ததாக சொல்கிறார்கள். அதற்கு எந்த ஆதாரமும் கிடையாது." என்று ஹெட்கேவரின் 'புரட்சி' வாழ்க்கையின் புரட்டுகளை அம்பலப்படுத்திக் காட்டுகிறார்.
ஆபத்து தரக்கூடிய பல இரகசிய வேலைகள் இவரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று கூறுகிறார்களே தவிர, எந்த வேலையை செய்தார்? எங்கே தூது போனார்? எந்த ஆயுதத்தை எடுத்துக் கொண்டு போனார்? என்பதற்கான விளக்கங்களை எதையுமே ஆர்.எஸ்.எஸ்.காரர்களால் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை!கல்கத்தாவில் சிறைச்சாலையிலே அடைக்கப்பட்டார் என்று அப்பட்டமான பொய்ப் பிரச்சாரம் செய்வதற்கும் அவர்கள் கூச்சப்படவில்லை. 'ஹெட்கேவர்' வாழ்க்கை வரலாறும் - ஆர்.எஸ்.எஸ். வரலாறும் ஒன்றே என்கிறார்கள்; இந்த 'சத்திய கீர்த்திகள்.'
ஆனால், இந்த 'உத்தம' 'புத்திரர்'களின் கதைகள் பொய்மைகளின் மூட்டைகளாகவே இருக்கின்றன.
கல்கத்தாவில் மருத்துவ டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டு ஹெட்கேவர் நாக்பூர் திரும்புகிறார்! அப்போது முதலாம் உலக மகாயுத்தம் துவங்கிவிட்டது. யுத்தத்தில் இங்கிலாந்தும் சம்பந்தப்படுகிறது!அந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, உள்நாட்டிலே ஆயுதம் தாங்கிய புரட்சியை உருவாக்கவேண்டும் என்று அவர் விரும்பினார்.
முதலாம் உலக மகா யுத்தம் துவங்கியபோது, ஜெர்மன் மொழியைப் படிக்க ஆரம்பித்தவர்கள் இந்த நாட்டு பார்ப்பனர்கள்தான்! காரணம், ஜெர்மன்காரர்கள் கையில் இந்திய ஆட்சி வந்துவிடும் என்று நம்பி,அந்த ஆட்சியிலே தாங்கள் செல்வாக்குப் பெற்று விடலாம் என்று அவர்கள் எதிர்பார்த்துக் கிடந்தனர்!
ஜெர்மன் - பாசிச இயக்கத் தலைவர் ஹிட்லர் மீது ஆர்.எஸ்.எஸ் காரர்களுக்கு எப்போதுமே மரியாதை உண்டு. ஹிட்லரின் ஸ்வஸ்திக் கொடி அமைப்பையே, தங்கள் கொடியாக வைத்துக் கொண்டிருந்ததுதான் இந்த ஆர்.எஸ்.எஸ். கூட்டம்!"இரண்டாவது உலக யுத்தத்துக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ். காரர்களுக்கு ஹிட்லர்தான் குரு. காந்தியாருக்கு எதிராக வெறுப்புணர்ச்சியை இவர்கள் பரப்பி வந்தார்கள். சுதந்திரப் போராட்ட உணர்வுகள், மதச்சார்பின்மை ஆகியவற்றை எதிர்த்து பிரச்சாரம் செய்து வந்தனர். ஜனநாயகத்தை அவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். அது மேற்கத்திய நாடுகளின் இறக்குமதி என்றார்கள். அதே அளவுக்கு சோஷலிசத்தின் மீதும் அவர்களுக்கு வெறுப்பு உண்டு. காரணம், சோஷலிசம் இந்து கலாச்சாரத்துக்கு எதிரானது என்று அவர்கள் உணர்ந்தார்கள்.
காந்தியாரை ஒரு தலைவராகவே அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.1965-ம் ஆண்டில்தான், மிகவும் சிரமத்தோடு வேறு வழியின்றி தங்களின் அன்றாடப் பிரார்த்தனையில் காந்தியார் பெயரையும் சேர்த்துக் கொண்டனர்."
நாம் மேலே எடுத்துக் காட்டியிருப்பது - மறைந்த சோஷலிஸ்ட் தலைவர் மதுலிமாயி அவர்கள் 'சண்டே'பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியைத்தான். (10.6.1979 சண்டே இதழ்) இந்தப் பின்னணியில் முதலாவது உலகப்போரை பயன்படுத்தி, உள்நாட்டில் ஆயுதப் புரட்சி நடத்திட, இவர் போட்ட திட்டத்தின் நோக்கத்தை உணர்ந்து கொள்ள முடியும்.
ஹெட்கேவர் தனது திட்டம் பற்றி, இவரின் ஞானகுரு திலகரிடம் எடுத்துச் சொன்னபோது, அது நடைமுறைக்கு ஒவ்வாதது என்று புறக்கணித்துத் தள்ளிவிட்டார்; இதற்கு எந்த முக்கியத்துவமும் திலகர் கொடுக்கவில்லை. திலகர் ஆதரவு இல்லை என்றவுடன், ஹெட்கேவரின் வீரமும் குறைந்தது.(இந்தக் கருத்துக்களை 'பிஷிகார்' தமது 'சங்நிர்மதா' நூல் பக்கம் 13-ல் விளக்குகிறார்.)
"நாக்பூருக்கு திரும்பிய ஹெட்கேவர், இந்து மகாசபையில் தான் சேர்ந்து விட்டதாகவும், அந்த அமைப்புக்குத் தேவையான நூல்கள், வெளியீடுகளைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், அவரே தனது நண்பர்களிடம் கூறுகிறார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தோற்றத்துக்கான எண்ண ஓட்டங்கள் இந்தக்காலத்தில்தான் அவருக்கு உருவானது."
"அந்த நேரத்தில், காங்கிரஸ் கட்சியிலும் இந்து மகா சபையிலும் ஒரே நேரத்தில், வேலை செய்கிறார்! ராஷ்டிரிய உத்சவ மண்டல் என்ற அமைப்பிலும் தீவிரமாகப் பங்கெடுத்தார். 'அக்ஹதா' என்ற மாணவர் அமைப்பிலும், பொதுக் கூட்டங்கள் - மாநாடுகளிலும் பங்கெடுத்துக் கொண்டார்." என்ற தகவல்களை'பிஷிகார்' தமது நூலில் குறிப்பிடுகிறார்.
இவர் அப்போது தீவிரமாகப் பங்கெடுத்த 'ராஷ்டிரிய உத்சவ மண்டல்' என்ற அமைப்பு ஒரு வன்முறை அமைப்பாகும்.
இந்த வகுப்பு வெறிக் கும்பல் மகாராஷ்டிர மாநிலத்தில் பிவாண்டி என்ற இடத்தில் மிகப்பெரிய வகுப்புக் கலவரத்தைத் தூண்டிவிட்டு நடத்தியதற்காக, மேடன் விசாரணைக் கமிஷனால் குற்றம் சாட்டப்பட்ட ஒரு கும்பலாகும்!ஒரே நேரத்தில் இந்து மகாசபையிலும் காங்கிரஸ் கட்சியிலும் சேர்ந்து இரட்டை உறப்பினராக பணியாற்றும்முறை அப்போது இருந்திருக்கிறது! பின்னர் அது ஒரு பிரச்சனையாக வெடித்துக் கிளம்பியபோதுதான் 1934-ம் ஆண்டு அதில் இந்திய காங்கிரஸ் 'இரட்டை உறுப்பினர் முறையை' தடை செய்து தீர்மானம் நிறைவேற்றியது.
மூத்த தலைவர்கள் பலருடன் ஹெட்கேவர் தொடர்பு கொண்டிருந்தாலும் ஒருவர்கூட இவரின் ஆயுதம் தாங்கியப் போராட்ட திட்டத்திற்கு ஆதரவு தரத் தயாராக இல்லை என்று எழுதுகிறார் 'பிஷிகார்' தனது நூலில் (பக்-27)

கிராமத்தான் கேட்கும் கேள்வி!

சாதி ஒழிப்போம்......சாதின்னா என்ன,அது எப்படி வந்தது, அதை பத்தியெல்லாம் பேசவேண்டாம். இன்னும் சாதி இருக்கு அதை எப்படி ஒழிக்கிறது. ஏன்டா விளக்கெண்ண..... உன்ன ஒருத்தன் அடிமைபடுத்துறான்னு உனக்கு எங்கோ சுடுதுல்ல. அப்புறம் நீ என்ன மயிருக்குடா இன்னொருத்தன அடிமைபடுத்த நினைக்கிற.செட்டியாருக்கு தேவர் அடிமை, தேவருக்கு பள்ளன் அடிமை, பள்ளனுக்கு பறையன் அடிமை, பறையனுக்கு சக்கிலியன் அடிமை, சக்கிலியனுக்கு வண்ணான் அடிமை.வண்ணானுக்கு இன்னொருத்தன்...நாம எல்லோருக்கும் வாயில வைக்க ஒருத்தன் இருக்கான். அவனுக்கு நாம எல்லோரும் அடிமை. ஊருல ஒரு நல்ல காரியம்னா, கோவில் திருவிழான்னா அவன கூட்டிகிட்டு வர்ற. அவனுக்கு உன்னோட சாமிக்கு மேல மரியாதை கொடுக்குற. அவன் என்ன சொன்னாலும் சாமி சொன்னா சரிதான் அப்படின்னு கோவில் மாடு மாதிரி தலைய ஆட்டிகிட்டு இருக்க. அவன் என்ன பண்றான், மணிய ஆட்டிட்டு இருக்குறது எல்லாத்தையும் அள்ளிகிட்டு போயிறான். அவனுக்கு நீ உழைச்சு சம்பாதிச்சு வாங்கிவச்ச பொருள் தீட்டு இல்ல, ஆனா நீ தீட்டு. என்னைக்காவது உன்ன அவன் வீட்டுக்குள்ள நுழைய விட்டுருக்கானா. நீ ஒரு நாளைக்கு அவன உன் வீட்டுக்கு வெளிய நிறுத்து பார்ப்போம். உனக்குத்தான் சொரணை எருமைய விட அதிகம் ஆச்சே.ஆமா உனக்கு கீழே இருக்கிறவன்னு சொல்லிக்கிட்டு நீ இன்னொருத்தன வீட்டுக்குள்ள ஏன் தெருவுக்குள்ள கூட விடமாட்டேங்கிற. அப்புறம் அவன் எப்படி உன்ன உள்ள விடுவான். அவங்களுக்குள்ள என்னைக்காவது சண்டை சச்சரவு வந்துருக்கா. உனக்கு அவன் வச்சா மட்டும் இனிக்குது. ஊர்ல கூட படிக்கிற நண்பன் ஒருத்தன், அவன நான் வாடா, போடான்னுதான் கூப்பிடுவேன். அந்த பையன எங்கப்பா வாங்க, போங்கன்னுதான் கூப்பிடுவார்(டனும்). ஏன்னா அவன் மேல் சாதி. அதே மாதிரி இன்னொருத்தன், அவனோட அப்பா என்னை வாங்க, போங்கன்னு தான் கூப்பிடுவார். நான் அவரை வா,போன்னு மரியாதை இல்லாம கூப்பிடலாம். ஏன்னா அவர் கீழ்சாதி.உன் அப்பாவ உன் கூட படிக்கிற ஒருத்தன் வா,போன்னு மரியாதை இல்லாம கூப்பிடும்போது உனக்கு சுடுதில்ல, அதேமாதிரி நீ இன்னொருவரை கூப்பிடும் போது அவரோட மகனுக்கும் சுடுமில்ல. அப்புறம் என்ன மயிருக்குடா அப்படி பண்றீங்க. நீ ஒருத்தனை அடிமையாக்க நினைச்சேன்னா உன்னையும் ஒருத்தன் அடிமைபடுத்துவான்.முதல்ல மனுசன மதிக்க கத்துக்க, கத்துக்கொடு.
அன்புடன்,
கிராமத்தான்....
நன்றி-விடாதுகருப்பு

வந்தேறிகள் கண்டுபிடித்த ஜாதிமுறைகள்!

சூத்திர‌ர்க‌ள் யாவர் என்ப‌த‌ற்கு மனுஅத‌ர்ம‌ சாஸ்திர‌ம் கீழ்க‌ண்ட‌ ப‌ட்டிய‌லை நமக்குத் த‌ருகிறது.
1. போரில் புறங்காட்டி ஓடியவன்.2. போரில் கைது செய்யப்பட்டவன்.3. பிராமணனிடத்தில் ஊழியம் செய்பவன்.4. விபச்சாரி மகன்.5. விலைக்கு வாங்கப்பட்டவன்.6. ஒருவனால் கொடுக்கப்பட்டவன்.7. தலைமுறை தலைமுறையாய் அடிமை ஊழியம் செய்பவன்.8. அடிமையின் மகன்.
-மனுதர்ம சாஸ்திரம், அத்தியாயம் 8; சுலோகம் 4
ஒரு சூத்திரன் மத போதனையைப் போதித்தாலோ அல்லது வேத வார்த்தைகளை முனுமுனுத்தாலோ அவனது நாக்கைத் துண்டித்திடவேண்டும். சூத்திரன் கல்வி அறிவு பெறாமல் தடுக்கப்பட்டான்.
--கெளதம தர்ம சூத்திரம்--
ஒரு சூத்திரன் வேதம் ஓதுதலை வேண்டுமென்றே காது கொடுத்துக் கேட்பானேயானால்,அவனது இரு காதுகளிலும் தகரத்தையோ அல்லது அரக்கையோ உருக்கி ஊற்றி நிரப்பவேண்டும். அவன் வேத பாடத்தை ஓதினால், அவனது நாக்கை அறுத்துவிட வேண்டும். அவன் வேத பாடங்களை நினைவு வைத்திருந்தால் அவன் உடலை இரு துண்டங்களாகப் பிளந்து விடவேண்டும்!
“சூத்திரனுக்கு அறிவு கொடுக்காதே, தர்மோபதேசம் பண்ணாதே. சண்டை வந்தால் சூத்திரன் எந்தப் பக்கம் இருக்கிறானோ அந்தப் பக்கத்துக்கே தண்டனை கொடு. அவனை அடி, உதை...” இப்படிச் சொல்கிறது அந்த வெங்காய மனு.
கஜினி முகம்மதுடன் வந்த ஆல் - பெரூனி என்ற பாரசீக அறிஞர், இந்தியாவைக் குறித்து தனிப்பட்ட முறையில் ஒரு ஆய்வு நூல் எழுதியுள்ளார். அவர் தான் கண்ணால் கண்டதையும், காதால் கேள்விப்பட்டது, படித்தறிந்தது ஆகிய அனைத்துச் செய்திகளையும், தாம் எழுதிய நூலில் மிகவும் தெளிவாக எழுதியுள்ளார். தன் சொந்தக் கருத்துக்களை அறவே ஒதுக்கியுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத் தக்கது.
அதில் சமஸ்கிருதம், வேதம் கற்கவோ, போதிக்கவோ முயலும் சூத்திரர்களுக்கும், வைஸ்யர்களுக்கும் கொடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட்டது பற்றியும் விரிவாக சொல்லியுள்ளார். மேலைநாட்டு அறிஞனுக்குக்கூட தெரிகிறது இந்த பார்ப்பன பரதேசிகளின் களவானித்துவம் பற்றி!
சூத்திரன் நிலைபற்றி அதே மன்னுஸ்மிருதி கூறுவதை மேலும் கூறுவதை பாருங்கள்:
1. பிராமணன் கூலி கொடுத்தும் கூலி கொடுக்காமலும் சூத்திரனிடத்தில் வேலை வாங்கலாம். (மனு; அதி.8. விதி 43)
2. பிராமணனால் கூலி கொடுக்கப்படாவிட்டாலும் வேலையிலிருந்து நீக்கப்பட்டு விட்டாலும் சூத்திரன் தான் வேலை செய்ய வேண்டிய பொறுப்பிலிருந்து நீங்கியவனாக மாட்டான். (மனு அதி. 8. விதி 414)
3. சூத்திரன் பொருள்கள் எதுவாய் இருந்தாலும் அது பிராமணனுக்கே சொந்தமானதாகும். (மனு. அதி. 8. விதி 416)
4. சூத்திரனின் பொருள்கள் யாவற்றையும் பிராமணன் சிறிதும் தயக்கமின்றிப் பலாத்காரமாகக் கைப்பற்றிக் கொள்ளலாம். சூத்திரர்களுக்குத் தொண்டுதான் சொந்தமே ஒழிய பொருள்களுக்குக் கொஞ்சமும் அவன் உரிமைக்காரன் அல்ல (மனு அதி 8. விதி 417)
5. சூத்திரனைப் பிராமணனுக்கே தொண்டு செய்யும் படி அரசன் கட்டளையிட வேண்டும். (மனு. அதி 8 விதி 418)
அன்றைக்கு பறையர்கள் என்ற பட்டம் மாறி பிறகு ஆதித் திராவிடர்கள் என்றாகி பின் அரிசனங்கள் என்கின்ற பட்டம் வந்து பிறகு தலித் என்று வந்தது போல் வேறு ஏதாவது ஒரு பெயர் ஏற்படலாமே ஒழியக் குறையும் இழிவும் நீங்கிவிடாது. விபச்சாரிகளுக்கும், குச்சிக்காரிகளுக்கும், தேவதாசி, தேவ அடியாள் என்கின்ற பெயர்கள் இருப்பதால் அவர்களுக்குச் சமூகத்தில் இழிவு இல்லாமல் போய்விடவில்லை. அதே நிலையில்தான் பார்ப்பனன் இவர்களை இன்றைக்கும் வைத்துள்ளான். பாப்பானே மறந்தாலும் மற்ற ஆதிக்க மேல்ஜாதி நாய்களும் விடுவதாக இல்லை என்பதும் உண்மையே!
பாப்பார பரதேசி நாய்களின் கட்டுக்கதைகளை மேலும் படியுங்கள். பிரம்மன் முதல் நான்கு சாதியையும் தன் உடல் பாகத்தில் இருந்து படைத்தான். அதன் விபரமாவது:
1. வாயிலிருந்து பிராமணன்.2. தோளிலிருந்து க்ஷத்திரியன்3. தொடையிலிருந்து வைஷ்யன்4. காலிலிருந்து சூத்திரன்.
பிராம்மணன், க்ஷத்திரியன், வைஷ்யன் மூன்றையும் ஆரியர் என்றும் வேதங்கள் அழைக்கின்றன. இவர்கள் இருமுறை பிறந்தோர்(Twice-born) என்றும் வேதங்கள் அழைக்கின்றன. சூத்திரன் ஒரு முறை பிறந்தவன். ஏனைய மூவருக்கும் சேவை செய்யப் படைக்கப் பட்டவன்.
திருமணத்தின் போது, தன் சொந்த சாதியிலேயே மணம் முடிக்க வேதங்கள் பரிந்துரைக்கின்றன. மாறி முடித்தால் பிறக்கும் குழந்தைகள் புதிய சாதியாவார்கள். அவை என்னென்ன ஜாதிகள் என்று இனிப் பார்ப்போம்.
ஒரு படி குறைந்து மணம் முடித்தால் (உ-ம் பிராமணன்-க்ஷத்திரியன், க்ஷத்திரியன் - வைஷ்யன்) பிள்ளைகள் தந்தையின் சாதியில் சேர்க்கப்படுவார்கள். ஆனால் குறை கூறப்படுவார்கள்.
அதில்... (ஆண் + பெண் = பிள்ளை)
பிராமணன் + க்ஷத்திரியன் = குற்றமுள்ள பிராமணன்க்ஷத்திரியன் + வைஷ்யன் = குற்றமுள்ள க்ஷத்திரியன்வைஷ்யன் + சூத்திரன் = குற்றமுள்ள வைஷ்யன்.
இனி ஒரு படி தாண்டி மணமுடித்தால் பிறக்கும் பிள்ளைகள் "அபஷதர்கள்" என அழைக்கப்படுவர். அபஷதர்கள் பல சாதிகளாகும். இது தாய் தந்தையரின் சாதியைப் பொறுத்தது.
அவை...
அபஷதர்கள்
பிராமணன் + வைஷ்யன் = அம்பஷ்தன்
பிராமணன் + சூத்திரன் = நிஷதன்(பரசவன்) {இதன் பொருள்: பரயன்+சவம் = உயிருள்ள செத்தவன்}
க்ஷத்திரியன்+சூத்திரன் = உக்ரன் {பொருள்: கொடியவன், cruel, ferocious, The english word "Ogre" came from this} (தமிழ்ச்சொல்லான உக்கிரம் என்பதும் இதன் மருவுதலே)
க்ஷத்திரியன் + பிராமணன் = சுதன்வைஷ்யன் + க்ஷத்திரியன் = மகதன்வைஷ்யன் + பிராமணன் = வைதீகன்
சூத்திரன் + வைஷ்யன் = அயோகவன்சூத்திரன் + க்ஷத்திரியன் = க்ஷத்திரியன்சூத்திரன் + பிராமணன் = கந்தலன்.
இனி, இந்தப் புதிய சாதிகளுடன் மூலச்சாதி இணைந்தால், இன்னும் புதிய சாதிகள் உருவாகும். அவை.
பிராமணன் + உக்ரன் = அவிர்த்தன்பிராமணன் + அம்பஷ்தன் = அப்ஹீரன்பிராமணன் + அயோகவன் = திக்வனன்
நிஷதன் + சூத்திரன் = புக்கசன்சூத்திரன் + நிஷதன் = குக்குதகன்க்ஷத்திரியன் + உக்ரன் = ஸ்வாபகன் (இதுவே ஆகக் கழிந்த சாதியாம்!)
இன்னும் பல...
இனி, புதிய சாதிகள் இரண்டு இணைந்தால் அதி புதிய சாதிகள் உருவாகும்.
உதாரணமாக
வைதேகன் + அம்பஷ்தன் = வேணன்.
இதன் சேர்மானங்கள்(combinations) அதிகம் என்பதால் சாதிகளில் பெயர்களை மட்டும் பட்டியலிடுகிறோம்..
விராத்தியன்பிஹ்ரிக்க கந்தகன்அவந்யன்வடதானன்புஷ்பதன்சய்கன்
கஹால்பன்மல்லன்லிக்கிவினன்நதன்கரணன்கசன்திராவிடன்
சுத்ஹன்வன்அகர்யன்கருஷன்விக்மனன்மைத்ரன்சத்வதன்
இவையெல்லாம் போக பிராமணப் பெண்ணுடன் சூத்திரன் விபச்சாரம் செய்ததால் பிறப்பவர்கள் சண்டாளர்களாம்! இதுபற்றி விரிவாக ஒரு கட்டுரை எழுத வேண்டும்.
..............
இப்படிப் போகிறது அந்த பார்ப்பன பரதேசிகள் எழுதி வைத்த கட்டுக்கதைகள்! பார்ப்பனன் மேலே பிரித்து வைத்த சாதிகளில் இருந்து நாம் சிலவற்றை புரிந்து கொள்ள முடிகின்றது.
1. அவை அனைத்தும், முறைப்படி திருமணம் முடித்தவர்களின்பிள்ளைகளின் சாதிகள்தான்.
2. முறைதவறிப் (adultary) பிறந்தால் வேறு சாதி.
3. ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு தொழில் பரிந்துரைக்கப் படுகிறது.
4. இப்பெயர்கள் அனைத்தும் சமஷ்கிருதப் பெயர்களே. (வெள்ளாளன்,முத்திரையன், முக்குவன் போன்ற) தமிழ்ச் சாதிப் பெயர்கள் இவைகளில்தான் இருக்க வேண்டும்.
இப்படி மக்களைக் கூறுபோடும் வெங்காய புரட்டு வேதங்களை நம்பி இன்று வரைக்கும் சாதிகளைக் கட்டிக்கொண்டு அழிந்து போகின்றான் தமிழன்..
"பிராமணன், இறைவனின் தலையிலிருந்து வருகிறான். சூத்திரன் காலிலிருந்து வருகிறான். இவை சக்தி பீடங்களான கற்றளிகளை சுட்டுகிறது என்று நம்புகிறேன்" என்று ஒரு வெறிபிடித்த பார்ப்பனர் தமிழ் இணையத்தில் எழுதியதை படித்தேன். உடனே நண்பரைத் தொடர்பு கொண்டு, "என்னய்யா இந்தாளு இப்படி எழுதி இருக்கானே?" என்றேன்.
அதற்கு அவர் சொன்னார், "ஏன்யா, அவன் அங்கேருந்து பொறந்தான், இவன் இங்கேருந்து பொறந்தான்னு சொல்றானுங்களே? அப்போ எவனுமே யோனியிலிருந்து பொறக்கலையா? இதென்ன கொடுமை?" என்று சொல்லிவிட்டு அவரே தொடர்ந்தார்.
"சரி பொறக்குறதுதான் வேற வேற இடம்? ராத்திரி வேலை எங்கே பாக்கிறானுங்க?"
"எல்லா பயலும் கால் செண்டர்ல தான்!"

Sunday, March 9, 2008

மார்ச் 08 சர்வதேச மகளிர் தினம்!

அது என்ன மகளிர் தினம்? மார்ச் 8 ஆம் தேதிக்கும் மகளிருக்கும் என்ன சம்பந்தம் என்று உழைக்கும் கீழ்த்தட்டுப் பெண்கள் வர்க்கமே அறிந்து கொள்ளாத தினமாகத்தான் இந்தப் பெண்கள் தினம் இன்றும் இருக்கிறது.
சர்வதேசப் பெண்கள் தினம் என்று ஒருநாள் வருவதற்குக் காரணமே இந்த உழைக்கும் பெண் வர்க்கம் தான் என்பது தங்கமுலாம் பூசப்படாத உண்மை!
மார்ச் 8 என்றால் சர்வதேச மகளிர் தினம் என்று நாமனைவரும் அறிவோம். ஆனால், எதற்காக மார்ச் எட்டாம் தேதியைக் குறிப்பாக தேர்ந்தெடுத்தார்கள்? சற்று வரலாறுகளில் பின்னோக்கித் தேடினால் வியப்பூட்டும் பல தகவல்கள் நமக்குக் கிடைக்கும்.
1789 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் (அரசனின் ஆலோசனை குழுக்களில்) என்று கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர்! ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்று பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்!
கிளர்ச்சிகள் என்றால் அதன் தீவிரம் புரிவதற்கு, அடுப்பூதும் பெண்கள்,இடுப்பொடியப் பாடுபடும் பெண்கள் கையில் கிடைத்த ஆயுதங்களைக் கையில் எடுத்துக்கொண்டு பாரிஸ் நகரத் தெருக்களில் அணி திரண்டனர்.
புயலாகக் கிளம்பிய பூவையரை துரும்பாக எண்ணிய அந்நாட்டு அரசன் இடியென முழங்கி, "இவர்களை என் அதிகாரம் கொண்டு அடக்குவேன் என்றும்" ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரைக் கைது செய்வேன் எனவும் அறிவித்தான்.
ஆயிரக்கணக்கான பெண்கள் கூட்டம்! அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்ள உற்சாகம் கரைபுரள கோஷங்கள் வானைப் பிளக்க அரச மாளிகை நோக்கி ஊர்வலம் கொட்டும் மழையில் ஊர்ந்து சென்றது!
அரச மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வோம் என்று மிரட்டிய அரசனின் மெய்க்காப்பாளர் இருவரையும் திடீரென கூட்டத்தினர் பாய்ந்து தாக்கிக் கொன்றனர்.
இதை எதிர்பாராத அரசன் அதிர்ந்து போனான். கோரிக்கைகளை கண்டிப்பாக பரிசீலிப்பேன். உங்களுக்குச் சாதகமாக அறிவிப்பேன் என்று ஆர்ப்பாட்டத்தில் கொதித்தெழுந்தவர்களைச் சமாதானப் படுத்தினான். இயலாது போகவும், அரசன் லூயிஸ் பிலிப் முடிதுறந்தான்.
இந்தச் செய்தி ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவிட அங்கும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்!
தொடர்ந்து கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட ஆளும் வர்க்கம் அசைந்து கொடுக்கத் தொடங்கியது.
இத்தாலியிலும் பெண்கள் இதுதான் சமயம் என்று தங்களது நீண்டநாள் கோரிக்கையான வாக்குரிமையைக் கேட்டு ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர்.
பிரான்சில், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள் 1848 ஆம் ஆண்டு மார்ச் 8 ம் நாளாகும்! அந்த மார்ச் 8 ஆம் நாள் தான் மகளிர் தினம் உலகெங்கும் அமைய ஒரு வித்தாக அமைந்தது.
அமெரிக்காவின் தொழிற்புரட்சி நகர் நியூயோர்க், இங்கு நெசவுத் தொழிலில் பெருமளவு பெண்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் பதினாறு மணிநேரம் வேலை செய்து மிகக் குறைவான ஊதியத்தைப் பெற்றனர். அந்த ஊதியத்தைப் பெறுவதற்குக் கூட நிர்வாகத்தில் உள்ளவர்களின் உடற்பசிக்கு இணங்கினால் தான் கிடைக்கும் என்ற நிலை இருந்தது.
1857 இல் நியூயோர்க் நகரில் உழைக்கும் பெண்கள் கூடி குரல் எழுப்பினர். பெண்களின் முதல் குரல் ஒலிக்கத் தொடங்கியது பொன்னாள்! தொடர்ந்து போராட்டங்கள், பெண்கள் அமைப்புகள் தோன்றின.
1908 இல் வாக்குரிமை கேட்டுக் கொதித்து எழுந்தனர். ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட்டே போராட்டத்தின் தாக்கம் கண்டு குலைந்து போனார். போராடினால் தான் உரிமைகள் கிடைக்கும் என்ற சிந்தனை உலகெங்கும் கிளர்ந்தெழுந்தது. அதன் விளைவு 1910 இல் ஹேகனில் சர்வதேச பெண்கள் மாநாடு கிளாரா தலைமையில் கூடியது.
அதன் தொடர்பாக சர்வதேச மகளிர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் 1911 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி ஜேர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்து கலந்து கொண்ட மகளிர் பிரதிநிதிகளின் முதல் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடினர்.
இந்தக் கூட்டத்தில் தான், அரசன் லூயிஸ் பிளாங்க் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புதல் அளித்த நாளான மார்ச் 8 ஐ நினைவு கூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் நாளை சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாட முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றினர்!
இந்த மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பிய பெண்கள் ஜேர்மனியில் பெண்கள் வாக்குரிமை கேட்டு மில்லியன் துண்டுப் பிரசுரங்களை நாடெங்கும் விநியோகித்தனர்.
ஜெர்மனியில் மகளிர் தொடங்கி வைத்த போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் உலகெங்கும் மகளிர் தங்கள் பிரச்சினைகளுக்காக போராட வேண்டும். போராடினால் தான் உரிமைகளைப் பெற முடியும் என்று எண்ணத் தலைப்பட்டு போராடத் தொடங்கினர்!
அன்று தொடங்கிய போராட்டம் இன்றும் பல விதங்களில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. காலத்தின் தேவைக்கேற்ப மகளிர் தங்களின் சவால்களை முன்வைத்துப் போராடி வருகின்றனர்!
வாழ்த்துகள் பெண்களே!

நிர்வாண ஓவியங்களும் இந்து தேசியமும்!

நீலகண்டன் என்ற பொய்யன் தமிழ்மணத்திலிருந்து நமது கேள்விகளை எதிர்க் கொள்ள திராணியின்றி ஏதேதோ சாக்குகள் சொல்லி ஓடிப் போன பிற்பாடு தேன்கூடு எனும் பார்ப்பன திரட்டியின் உதவியுடன் தனது பொய்யுரைகளை பரப்பி வருகிறான். சமீபத்தில் பார்ப்பன கடவுள்களை வைத்து நிர்வாண ஓவியங்கள் வரைந்த சில ஓவியக் கலைஞர்களை போலிஸ், முதலமைச்சர் ஆதரவுடன் தாக்கிய பார்ப்பன பயங்கரவாதிகளை நியாயப்படுத்தி கட்டுரை எழுதியிருந்தான் இந்த பொய்யன்.அதில் ஏதோ அந்த பார்ப்பன பயஙகரவாதிகள் மிகவும் சாத்வீகமாக நடந்து கொண்டதாக நிறுவ முயன்றிருந்தான். இதனை டானிஷ் பத்திரிகையில் இஸ்லாமிய இறைத் தூதர் முகமதுவை கிண்டல் செய்து வந்த கார்டூனுக்கு இஸ்லாமிய சமூகம் கொந்தளித்ததை ஒப்பிட்டு நியாயப்படுத்தியிருந்தான்.ஆனால் வழக்கம் போல அரைப் பொய்களை வைத்து ஜல்லியடிக்கும் இந்த பயங்கரவாதி இங்கும் கூட உண்மையின் ஒரு பக்கத்தை மட்டுமே காட்டுகிறான். இஸ்லாமியர்கள் என்றாலே பயஙகரவாதிகள் என்று மேற்குலக ஊடகங்களும், பார்ப்பன் ஊடகங்களும் தொடர்ந்து பல்வேறு நுண்ணிய தளங்களில் பிரச்சாரம் செய்து வருவதன் ஒரு தொடர்ச்சியாக திட்டமிட்ட ஒரு நடவடிக்கையாக அந்த கார்டூன் இருந்ததை படிப்பவர் கருத்திலிருந்து மறைக்கிறான் இந்த பயங்கரவாதி. அதுவும் ஒரு வெகுசன பத்திரிக்கையில் பிரசூரமாகியது அந்த கார்டூன். அதுவும் நேரடியாக இஸ்லாமை பயஙகரவாதத்துடன் ஒப்பிட்டு இருந்தது. இதற்க்கு அந்த சமூகம் அமைதி காத்திருந்து ஒப்புதல் கொடுக்க வேண்டும் என்பது பார்ப்பன பயங்கரவாதியின் எதிர்பார்ப்பு.ஆனால் இவர்கள் எதிர்த்த கலை கல்லூரி ஓவியங்களோ அல்லது எம். எப் ஹுசைனின் ஓவியஙகளோ எந்தவொரு வெகு சன ஊடகங்களிலும் பிரசூரிக்கப் படுவதில்லை. அவைகள் ஏதோ சில அறிவுஜீவி கோஸ்டிகள், தின்ற சோறு செரிக்க வக்கற்ற கஸ்ட ஜீவிகள் துட்டு கொடுத்து பார்த்துச் செல்லும் கண்காட்சி பொருட்களாகவே காட்சிக்கு வைக்கப்படுகின்றன. இந்த வித்தியாசம் புரிந்தால் அதாவது திட்டமிட்டு பொதுக்கருத்தை உருவாக்கும் பார்ப்பன-ஏகாதிபத்திய ஊடகங்களின் பிரச்சாரத்திற்க்கும், தனியொரு கழிசடைக் கலைஞன் வெகு சொல்பமான பார்வையாளர்களுக்கு காட்சிப் படுத்தும் ஓவியங்களின் தன்மைக்கும் இடையிலுள்ள இந்த வித்தியாசம் புரிந்தால் இந்த பயஙகரவாதிகள் தமது பாசிஸ்டு நடவடிக்கைகளுக்கு ஆதரவான பொதுக் கருத்தை உருவாக்கும் முகமாகவே இது போன்ற செயல்களை செய்வது புரியவரும். இதனை முன்னிட்டே இந்த இரண்டையும் ஒன்று என்று நிறுவ முற்ப்படுகிறார்கள்.சரி உண்மையில் இவர்களின் பாரத மாதாவை கதற கதற பாலியல் பாலத்காரம் செய்து, நிர்வாணப்படுத்தி, ஒரு ஒவியனால் வரைய முடியாத அளவுக்கு வக்கிரமாக பாரத மாத எனும் தாயை ஒரு பெண்ணை அசிங்கப்படுத்தும் சம்பவங்கள் குறித்து இந்த பயங்கரவாதிகள் என்ன எதிர்வினை செய்கிறார்கள்?கங்கா மாதாவை வாஜ்பேயி எனும் சுயம் சேவக் சுயஸ் டேமொடெரெண்டு எனும் பன்னாட்டு கம்பேனிக்கு கூட்டி கொடுத்த பொழுது கூட்டி கொடுத்த காசில் தின்றவர்கள்தான் இந்த பயங்கரவாதிகள். (இந்திய வளங்களை பெண்ணின் உடல் பாகங்களோடு ஒப்பிட்டு எழுதுவதற்க்கு பெண்கள் என்னை மன்னிக்கவும், இந்தியாவை இந்த பயங்கர்வாதிகள் மாதா என்று பெண்ணுடன் ஒப்பிடுகிறார்கள். இந்த ஒப்பீட்டில் உள்ள கயமைத்தனத்தை, வக்கிரத்தை புரிய வைக்கும் முகமாகவே இந்தியாவை அதே போன்று பெண்ணுடன் ஒப்பிட்டு அவளுக்கு செய்யப்படும் அவமானங்களை முன்னுக்கு கொண்டு வந்து. அந்த செயல்களுக்கு பார்ப்பன பயஙக்ரவாதிகள் என்ன செய்கிறார்கள் என்பதை அம்பலப்பத்த வேண்டியுள்ளது) தண்ணீர் தனியார்மயம் முதல், இந்திய வளங்களை, இந்தியாவின் விவசாய நிலங்களை அதாவது பாரத மாதாவின் ஒப்புயர்வற்ற அற்புதமான உடல் பாகங்களையெல்லாம்(சௌந்தர்ய லகிரியில் வர்ணித்திருப்பது போல அற்புதமான உடல் பாகங்கள்) பன்னாட்டு தரகு கம்பேனி முதலாளிகளுக்கு கூட்டி கொடுப்பதற்க்கு இவர்கள் எந்தவொரு எதிர்ப்பும் காட்டுவதில்லை. இன்னும் சொன்னால் கூட்டிக் கொடுக்கும் தரகு வேலையில் ஆர்வத்துடன் ஈடுபட்டு தமது பயஙகரவாத பிரச்சாரத்திற்க்கு பொருளீட்டுவதில் முன்னணியில் நிற்கிறார்கள் இவர்கள்.சாதி வெறியர்கள் இந்தியாவின் பல இடங்களில் தாழ்த்தப்பட்ட மக்களை அவமானபடுத்தியிருக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட பெண்களை சொல்ல வாய்கூசும் முறைகளில் கொடுமைப்படுத்தி கொன்றுள்ளார்கள் அது போன்ற அவமானகரமான சமபவங்களுக்கு RSS பயங்கரவாதிகளின் எதிர்வினை என்ன? பல இடங்களில் சாதி இந்துக்கள்தான் RSSன் செயல்வீர்ர்களாக இருக்கின்றனர். பல இடங்களில் இது போன்ற வன்கொடுமைகளுக்கு ஆதரவாளர்களாகவே இருந்துள்ளனர்(சமீபத்தில் மத்திய கர்நாடகாவில் BJP MLA தாழ்த்தப்பட்டவர்கள் மீதான வன்கொடுமைக்கு ஆதரவாக வேலை செய்தார்.)ஆக, உண்மையில் எம். எப் ஹுசைன் எனும் கழிசடை ஓவியனை விட பல மடங்கு பெரிய அளவில் பாரத மாதாவை அவமானப்படுத்துபவர்கள் இந்த பார்ப்பன் பாசிஸ்டுகள்தான். பாரத மாதாவை இவர்கள் பாசையில் இந்து தேசியத்தை அவமானப்படுத்துபவன் எவனோ அவனுக்கு அவனது குற்றத்தின் தன்மைக்கேற்ப தண்டனை எனில் மரண தண்டனைக்கான தகுதி பார்ப்பன பாசிஸ்டுகளான RSS கும்பலுக்கே சேரும். இந்த உண்மை தெரிந்து விடக் கூடாது என்பதால்தான் போலியாக எதிரிகளை உருவாக்கி சாதாரண மக்களை மதி மயங்கச் செய்கிறார்கள் இந்த புரோக்கர்கள். ஆங்கிலேயன் பாரத மாதாவை வன் புணர்ச்சி செய்ய விளக்கு பிடித்த கோல்வால்கரின் பாரம்பரியம் அல்லவா? இதில் 80 வருட அனுபவம் வாயந்த அமைப்பல்லவா? விளக்கு பிடிக்கும் வேலையை மிகவும் நூதனமாகவே செய்கிறார்கள்.
அசுரன்
நன்றி அரசுபால்ராஜ்

தினமணியின் பூணூலில் பொங்கி வழியும் RSS கொழுப்பு!!!

RSS ன் கொழுப்பெடுத்த அயோக்கியத்தனத்தை தனது பத்திரிக்கையில் வாந்தியெடுத்ÐûÇÐ திணமணி எனும் பார்ப்பனமணி பத்திரிகை. இந்து மக்கள் கட்சி எனும் RSS பயங்கரவாதிகளின் அல்லக்கை கட்சி ஒன்றின் அடியாள் படை தாதா நாயான அர்ஜூன் சம்பத என்பவன் பெயரில் வெளி வந்த ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது அந்த பத்திரிகை(ஆன்மிகத்துக்கு விடுக்கப்பட்ட சவால், Friday March 7 2008 00:00 IST, தினமணி). சிதம்பரத்தில் சமீபத்தில் தமிழில் பாடுவதற்க்கு தடையாக இருந்த தீட்சிதர்களை பின் வாங்க வைத்து பாதி கிணறு தாண்டியுள்ள நிலையில் ரொம்ப நல்லவன் போல எழுதுகிறான் இந்த கோயம்புத்துர் கொலைகார பொறுக்கி. ²தோ தீட்சிதர்கள் அங்கு தமிழை எதிர்க்கவில்லை என்பது போலும். இன்னாள் வரை தீட்சிதர்கள் அங்கு வேறு சாதியினரையும் தமிழையும் வளர்த்தே வந்துள்ளன்ர் எனபது போலும் மாறாக மக்கள் கலை இலக்கிய கழகம் உள்ளிட்ட திராவிட கம்யுனிஸ்டு கட்சியினர்தான் பிரச்சினை உண்டு பன்னுவதாகவும் கொழுப்பெடுத்து பேசுகிறான் ஒரு பார்ப்பன பயங்கரவாதி. ஆயினும் தீட்சிதர்கள் வரலாறும் சரி இன்றைய நடப்பும் சரி மக்களை அவமதிப்பதாகவே உள்ளது.
ஏதோ இந்துக்கள் எல்லாருக்கும் நான் தான் ஹோல்சேல் பாதுகாப்பு குத்தகை எடுத்துள்ளேன் என்பது போல கதறும் இந்த வெறியர்கள் நேற்று அதாவது 6 மார்ச் 2008 ல் சிதம்பரம் கோயிலில் தமிழில் பாடியததற்க்Ì தீட்டு கழித்து தீட்சிதர்கள் நடத்திய பரிகார பூசையை எந்த லிஸ்டில் சேர்ப்பார்கள்?
தீட்சிதர்களின் வரலாறும் ஆக ஆயோக்கியத்தனமானதுதான். இந்து மக்கள் கட்சி என்ற பெயரில் பெரும்பான்மை இந்துக்களை அவமானப்படுத்தி எழுதியுள்ள இந்த தினமணி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தேவர தமிழ் ஓலைகள் ராஜ ராஜ சோழனால் பூட்டியிருந்த அறையிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட சம்பவமே கூட தீட்சிதர்கள் தமிழை எந்தளவுக்கு அவமானப்படுத்தியுள்ளனர் என்பதற்க்கு ஒரு சான்றாகும். லட்சத்துக்கும் மேற்ப்பட்ட தமிழ் பாடல்களை ஒரு அறையில் பூட்டி நாசம் செய்ததுடன் இல்லாமல். ராஜ ராஜ சோழன் வந்து அந்த அறையை திறக்க சொன்ன போது திறக்க மாட்டேன் என்று அடாவடித்தனமும் செய்தனர் (இன்று தமிழில் பாடுவதற்க்கு செய்வது போலவே). இதில் பாதிக்கும் மேற்ப்பட்ட தேவரப் பாடல்கள் தீட்சிதர்களின் அயோக்கியத்தனத்தால் அழிந்து போய் மீதியுள்ளவைதான் கிடைத்தன. வரலாறு இப்படியிருக்க அர்ஜூன் சம்பத அல்லது அவன் பெயரில் எழுதிய அல்லக்கை வரலாற்றை திரித்து எழுதுகிறது. அன்றாட சம்பவங்களையே திரித்து எழுதுபவர்களுக்கு வரலாற்றை திரிப்பது பெரிய விசயமில்லைதான்.
இது அன்று வரலாறு என்றால் இன்று கடந்த சில வருடங்கÇ¢ல் மட்டும் சிதம்பரம் கோயிலில் வளாகத்திலேயே சில கொலைகளும், பாலியல் வன்புணர்வு குற்றம் ஒன்றும் நடந்துள்ளது. இவற்றில் எல்லாம் தீட்சிதர்கள்தான் சம்பந்தப்பட்டுள்ளனர். இப்படி சிதம்பரம் கோயிலின் புனிதத்தை தமது சொந்த அரிப்புக்காக கெடுத்து வருபவர்கள் பார்ப்பனர்கள் என்ற ஒரே காரணத்தினால் ஆதரிக்கிறது இந்த RSS கும்பல்.
சாளுக்கிய மன்னனுக்கும், சோழப்பேரரசின் இளவரசிக்கும் பிறந்த குலோத்துங்க சோழனுக்கு முடியுரிமை வழங்குவதா கூடாதா என்ற சர்ச்சை எழுந்தபோது, தில்லை தீட்சிதர்கள் சாளுக்கிய வாரிசினை ஆதரித்துப் பட்டம் சூட்டத் துணை நின்றதாகவும், அதன்பேரில் தீட்சிதர்கள் குலோத்துங்கனிடமிருந்து பல உரிமைகளையும் தில்லைக் கோவில் சொத்துக்களையும் பெற்றதாகவும் வரலாறு சொல்கிறது. அதில் இருந்து தீட்சிதர்கள் சாளுக்கிய வம்சத்தில் இருந்து சோழனாக மாறிக்கொண்ட குலோத்துங்கன் காலத்தில் செப்பேடுகளில் மட்டும் தேவாரம் இருக்கட்டும். தினமும் பாடத்தான் வேண்டுமா? என்று தந்திரமாக தமிழை நடராசனிடம் இருந்து அகற்றி விட்டனர். இந்த சதியினை நக்கீரன் பத்திரிக்கை அம்பலப்படுத்தி இருக்கிறது. ஆனால் தினமணியோ வரலாற்றையே புரட்டிப்போடுகிறது.
பார்ப்பன பயங்கரவாத அமைப்பான RSS என்றைக்கும் பெரும்பான்மை மக்களின் இறை நம்பிக்கைய மதித்ததே கிடையாது. நாட்டார் வழிபாட்டு தெய்வங்களையும் மாமிசம் உண்ணும் கடவுளர்களையும், சிறு தெய்வங்களையும் அவமரியாதையாக கருதி அவற்றை புணீதப்படுத்தி பார்ப்பனமயமாக்குவதுடன் இது போல ஏற்கனவே பார்ப்ப்னியமயமாக்க்கப்பட்ட கோயிலகளில் சதாரண மக்களை அவமரியாதை செய்வதையும் எதிர்த்து குரல் கொடுத்ததில்லை.
தாழ்த்தப்பட்டவர்கள் கருவறைக்குள் நுழைவதாகட்டும், தேர் இழுப்பதில் உரிமை கேட்பதாகட்டும் இவர்கள் ஆதிக்க சாதியினர் பக்கமிருந்தே குரல் கொடுப்பர். அது போலவேதான் இப்பொழுதும் கூட பார்ப்பனியத்தின் பக்கமிருந்து குரல் கொடுக்¸¢றார்கள்.
10.5.2005 அன்று ராமகோபாலன் தனது தொண்டர்களோடு இஸ்லாமியர் வாழும்பகுதியான கோட்டைமேட்டை ஒட்டிய உக்கடம், மதுரைவீரன் கோவிலுக்கு வருகிறார்.1008 கோயில்களுக்கு செல்லும் பயணத்தில். இந்த 10 ஆண்டுகளில் தொய்ந்துபோயுள்ள சங்பரிவாரத்தாருக்கு புத்துணர்ச்சியூட்ட இந்த யாத்திரையை மேற்கொண்டிருக்கிறார்.
அப்பகுதி இளைஞர்கள் அவரைத்தடுக்கிறார்கள். கோயிலில் நுழைய அனுமதி மறுக்கிறார்கள். ஒரு இந்துவான தனக்கு இந்துக்கோயிலில் நுழைய உரிமையுண்டு என்கிறார் ராமகோபாலன்.
'அதே உரிமை எங்களுக்கும் உண்டல்லவா?' 'இங்கிருந்து 10 கி.மீ.தொலைவிலுள்ள காளப்பட்டியில் மாரியம்மன் கோயிலில் நுழைய முயன்றதற்காக அருந்ததியர் காலனி தீவைத்துக் கொளுத்தப்பட்டது தெரியுமா?' என்று கூறி இந்துக்களாகிய நாங்கள் அந்த கோயிலில் நுழைவது குறித்து பேசிவிட்டு இந்த கோயிலில் நுழைந்து கொள் என்று தடுத்துள்ளனர் இளைஞர்கள்.
இந்துக்களிடையேயான பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்கிறார் ராமகோபாலன். 'அப்படியானால் முதலில் காளப்பட்டி போவோம். மாரியம்மனை ஒன்றாக தரிசனம் செய்துவிட்டு பின்பு மதுரைவீரன் கோயிலுக்கு வருவோம்' என்கின்றார்கள் இளைஞர்கள். ஏற்றுக்கொள்ள முடியாத அநீதியான தர்மத்திற்கு விரோதமான நிபந்தனை என்று மறுத்துவிட்டுத் திரும்புகிறது காவிப்படை.
ஒருவாரம் கழித்து 24-05-2005 அன்று கோவை ஆவாரம் பாளையத்தில் உள்ள பண்டத்தரசியம்மன் கோவிலுக்கு தகுந்த தயாரிப்புகளோடு வருகிறார் ராமகோபாலன்.
இந்த முறை கோட்டைமேட்டை விட மிகச் சிறந்த வரவேற்பு அவருக்கு. கோவில் இருக்கும் தெருவில் நுழையவே அவர் அனுமதிக்கப்படவில்லை. அதே நிபந்தனை. ஆவாரம்பாளையமே திரண்டுவந்து அவரைத் தடுக்கிறது. தங்கள் இலக்குகளை சரியாக அடையாளம் கண்டுகொண்ட அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் அவர்கள். (நன்றி: புதுவிசை)
இன்று இத்தனை வக்கனையாக பேசும் இந்த பொய்யர்கள் ஏன் ஆறுமுகசாமி முதன் முதலில் தமிழில் பாடச் சென்ற பொழுது தாக்கப்பட்டது குறித்து பேச மறுக்கிறார்கள்? கள்ள மௌனம் சாதிக்¸¢றார்கள்?
அப்பொழுது அவருடன் எந்த கம்யூனிஸ்ட் இருந்தான், எந்த மக இகக்காரன் இருந்தான்?
கோவை கலவரத்தில் ரவுடித்தனம் செய்த அர்ஜூன் சம்பத்தை நாளை அவனது மக்கள் விரோத செயல்களுக்காக மக்கள் அவனுக்கு நடு வீதிகளில் தண்டனை கொடுக்கும் போது அவன் அம்மா என்றுதான் கத்தப் போகிறான். மாதாஜி என்றல்ல என்பதை அவன் நியாபகம் வைத்துக் கொள்ளட்டும்.
இத்தனை வக்கனையாக பேசும் RSS மக்கள் விரோத கும்பல் நீதிபதியிடம் ஆறூமுகச்சாமியை விடமுடியாது என்பதற்க்கு மறுப்பாக தீட்சிதருக்கும், சம்ஸ்கிருதத்திற்க்கும் பாரம்பரிய உரிமைகள் இருப்பதாகவும், பிறரை அந்த மண்டபம் வரை அனுமதிப்பது நகைகளுக்கு ஆபத்து என்றும் கூறி வாதாடியதை எதிர்த்து எதேனும் செய்வார்களா?
அதாவது தீட்சிதர் தவிர்த்து, சம்ஸ்கிருதம் தவிர்த்து வேறெதற்க்கும் கோயிலில் உரிமையில்லை என்பதுதான் அவர்களின் வாதமெனில் இந்துக்களின் நலனுக்கு போராடும் RSS கும்பல் இன்னேரம் தீட்சிதர்களின் மண்டையில் தட்டி வழிக்குக் கொண்டு வந்திருக்க வேண்டுமல்லவா?
அதாவது தீட்சிதர் தவிர்த்தும், சம்ஸ்கிருதம் தவிர்த்து வேறெதற்க்கும் உரிமையில்லை என்பது சாதிவெறியில்லையா? மொழி வெறியில்லையா?
தீட்சிதர் தவிர்த்து மற்றயவர்களை கோயிலில் விட்டால் திருட்டு போய்விடும் என்று சூத்திரன் அத்தனை பேரும் திருடன் என்று சொல்வது RSS வெறியர்களுக்கு தேனாக இனிக்கிறது போலும்.
இவையெல்லாம் சாதி வெறி, மொழி வெறி பிடித்து பெரும்பான்மை மக்களை அவமதிப்பவர்கள் RSS உள்ளிட்ட பார்ப்பன வெறீ கும்பலா அல்லது வேறு யாருமா என்பதை தெளிவாக காட்டுகின்றன.
இவற்றையெல்லாம் பிரசூரிப்பதற்க்கு திணமணியின் கழுத்தில் பாயந்து வயிற்றில் ஊடும் பூனூல் அனுமதிக்காது.
இப்படியெல்லாம் பேசினால் உடனே இஸ்லாமில் வேற்று மொழியில் இருக்கிறதே என்று ஒரு வாதம் வைக்கிறார்கள் இவர்கள். மசூதிகளில் அராபியில் ஓதுகிறார்கள்தான். அங்கு தாய்மொழிக்காகக் குரல் எழும்பி, அதற்கு இமாம்கள் தடைபோட்டால் அதற்கும் குரல்கொடுப்போம். ஆனால் கிறித்தவமோ, இசுலாமோ தமிழ் மொழியை நீச பாசை என்றோ, தமிழ்மக்களை-சூத்திரர்களை 'வேசிமக்கள்'என்றோ சொல்வது இல்லை அதுவும் நீதிமன்றம் முதல் இதோ தினமணியில் அறிக்கை வடிவில் வரை தமிழை அவமானப்படுத்திவிட்டு தைரியமாக வலம் வருவதில்லை அவர்கள் என்பதும் உண்மை.
பிறமதத்துக் காரர்களிடம் தமிழில் வழிபாடு நடத்து என்று வலியுறுத்துவார்களா என்று வக்கனையாக கேட்க்கும் இவர்கள் இங்கு கிறித்துவ வழிபட்டு இடங்களில் தமிழில்தான் வழிபாடு நடக்கிறது. மேலும் பைபிளை அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து அதனை வாசிக்கக் கல்வியை அவர்கள் தந்ததால்தான் கல்வியும் கிறித்தவமும் ஒடுக்கப்பட்டமக்களிடையே பரவிற்று. முதலில் இந்துமத வேதங்களையும், உபநிசத்துக்களையும், அப்படியே சங்கரர் எழுதிய சரோஜாதேவி புத்தகத்தையும், சவுந்தர்ய லகரியையும் மொழிபெயர்த்துவிட்டு இதைப் பத்திப் பேசலாம்.
இதே முற்போக்கு புரட்சிகர அமைப்பினர்தான் இஸ்லாமிய பிற்போக்கு தனங்களுக்கு, பெண்ணடிமைத்தனங்களையும், தஸ்லீமா நஸ்ரீனுக்கு ஆதரவாகவும் வீதிகளில் இறங்கி போராடுகிறார்கள். அமைதியாக அயோக்கியத்தனம் செய்யும் போதெல்லாம் ஏதோ பார்ப்ப்னிய மதத்தில் ஆக சிறப்பாக பல்வெறு விசயங்கள் இருக்கிறது என்று பூ சுற்றுவதும். அவர்களின் அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்தினால் உடனே இஸ்லாமில் இல்லையா, கிருத்துவத்தில் இல்லையா என்றோ அல்லது பாகிஸ்தானில் இல்லாததா, பங்களாதேசில் இல்லாதாதா என்றும் வேறு மாதிரி பேசுவதும் என்பதாக இரட்டை நாக்கு கொண்டவர்கள் இவர்கள். ஏதோ நாம் இஸ்லாம், கிருத்துவம், பாகிஸ்தான், பங்களாதேஸ் எல்லாம் மிக முற்போக்கானவை என்று சொன்னது போல.
இன்று நாத்திகனுக்கு அங்கென்ன வேலை என்று கேட்க்கும் கோயம்புத்தூர் கொலைகாரன் அர்ஜூன் சம்பத என்ற மனிதகுல விரோதி, ஆத்திகரான ஆறுமுகசாமி தனது உயிருக்கு நாத்திகர்களான மக இகவினர் துணையின்றி தீட்சிதர்களால் ஆபத்து என்று கோர்ட்டில் ஒப்படைத்து சிறை புகுந்த போது அவருக்கு பாதுகாப்பு கொடுக்க முன் வந்திருக்கலாமே? தஸ்லீம நஸ்ரீனுக்கு ஆதரவளிக்க முன் வந்த வாய்களுக்கு ஏன் ஆத்திகரான ஆறுமுகச்சாமிக்கு ஆதரவளிக்க முடியவில்லை?
அதாவது சர்ச்சையின் நோக்கம் ஆன்மிகமாக இல்லாததுதான் இவர்களுக்கு கவலையளிக்கிறதாம். உண்மையில் இவர்களுக்கு கவலையளிப்பது இவர்களின் பார்ப்ப்னிய ஆன்மிக ஆதிகத்திற்க்கு ஆபத்து உருவாகியுள்ளது என்பதே ஆகும். ஆத்திகரான ஆறூமுகச்சாமிக்கெதிராக தமிழுக்கெதிராக வரலாறு நெடுகிலும் தீட்சிதர்கள் சதி செய்த பொழுதெல்லாம் கண்டிக்க வக்கில்லாத முதுகெலும்பற்ற அடிமை கும்பல் தலைவான அர்ஜூன் சம்பத் இன்று தமிழர்களின் உரிமைக்கு போராடும் போது ரொம்ப நல்லவன் போல சதி செய்கிறார்கள் என்று முதலை கண்ணீர் வடிப்பதின் பின்னால் உள்ள சதியை நாம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
என்றைக்கு பெரும்பான்மை மக்களின் பண்பாட்டை அவமதிப்பது என்றும், பெரும்பான்மை மக்களின் உரிமைகளை அவமதித்து மறுப்பதும் என்றும், பிற்போக்குத்தனத்தால் மக்களை முட்டாள் ஆக்குவது என்றும் ஆகிவிட்டதோ அன்றே அங்கு ஆத்திகம் நாத்திகம் என்பதெல்லாம் இல்லை மாறாக மக்களின் உரிமை மட்டுமே முன்னுரிமை பெறுகிறது. அதனால் அதற்க்கான போராட்டத்தின் நியாயத்தைத்தான் நேர்மையானவன் என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறவன் பேச வேண்டுமேயொழிய அதை விடுத்து அப்பொழுது வந்து ஆத்திகம் நாத்திகம் என்று பேசினால் உண்மையில் அவன் ஏதோ சூழ்ச்சி செய்கிறான் என்றுதான் அர்த்தம். அர்ஜூன் சம்பத்தும் சரி அவருக்கு இந்த கட்டுரையை எழுதி கொடுத்த கும்பலும் சரி சூழ்ச்சிகள் செய்வதில் விற்பன்னர்கள் என்பது சமீபத்தில் தென்காசி இந்து முன்னணியினர் குண்டு வைத்து கைதான சம்பவத்திலும், கோவையில் குண்டு இருப்பதாக புரளி கிளப்பி அப்பாவிகளை மாட்டி விட்ட வழக்கிலும் சரி தெளிவாகவே அம்பலமாகியுள்ளது.
ஆறுமுகசாமி சிவபக்தர்தான். அவரின் பக்தியை இந்துமக்கள் கட்சியும் தீட்சிதர்களும் மதிக்கிறார்கள். அவர்களே அவரின் பக்தியை மெச்சி, நாத்திகம் பேசுறவாளிடம் இருந்து தனியாகித் தன்னந்தனியனாகி ஆறுமுகசாமி வந்தால் அவரை அரவணைப்போம் என்கிறார்கள். இதை நாம் நம்புவதற்கு நாம் ஒன்றும் நந்தனார் மாதிரி அப்பாவிகள் இல்லை. ஏனெனில் நேற்று போலிஸ் பாதுகாப்புடனும், மனித உரிமை கழகம், மக இக உள்ளிட்ட தோழமை அமைப்பினரின் பாதுகாப்புடன் சென்ற பொழுதே தீட்சிதர்கள் போலிசையும் தாக்கி போராடியவர்களையும் தாக்கினர் எனும் போது தனியாக வந்தால் இவர்களின் அரவணைப்பு எப்படியிருக்கும் என்று தனியாக சொல்ல வேண்டியதில்லை. இவர்கள் அரவணைப்பையும், பின்னர் சோதியில் கலக்கவைக்கும் பித்தலாட்டத்தையும். தில்லைக்கோவிலின் தென்வாயிலே சொல்கிறது. அன்று நந்தன்காலத்தில் ம.க.இ.க. தோழர்கள் இல்லை. நீதிமன்றம் (அநீதியே சொன்னாலும் அதன் பெயரிலாவது) இல்லை. இருந்திருந்தால். நந்தன் கதையை இன்று இருப்பது போல படித்திருக்க நியாயமில்லை.
பார்ப்ப்னியம் அதுவும் குறிப்பாக சிதம்பரம் தீட்சிதர்கள் வேற்று சாதியினரையும், மாற்று கருத்துள்ளவர்களையும் அரவணைக்கும் வரலாறு நந்தன், வள்ளலார் முதல் இன்று ஆறுமுகச்சாமி வரை நன்றாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை நாத்திகர்களான மக இக, மனித உரிமை கழகம் போன்ற அமைப்புகள் ஆயிரம் வருடங்களுக்கு முன்பே இருந்திருந்தால் ஆத்திகர்களான நந்தனையும், வள்ளலாரையும் இன்னும் சில பல பார்ப்ப்னிய எதிர்ப்பு தியாகிகளின் உயிரையும் பாதுகாத்திருக்கலாம்.
இந்தியாவெங்கும் பொய்யையும் புணை சுருட்டையும் ஆயுதமாக கொண்டு வரலாற்று அவமரியாதை துடைக்க கட்டிடங்களை இடித்து தள்ள புறப்பட்ட வாணர கும்பலின் தலைமை கொலைகார தறுதலையான அர்ஜூன் சம்பத். சிதம்பரத்தின் தெற்கு வாயில் இன்றும் தாழ்த்தப்பட்டவர்களின் அவமரியாதைச் சின்னமாக நிற்கிறதே. இந்து மக்கள் முன்னணி அந்த சுவரை இடிக்க கரசேவை ஆரம்பித்துவிட்டு நியாயவான் போல பேசட்டும்.
இந்த மக்கள் எழுச்சி 19ஆம் நூற்றாண்டில் இருந்திருந்தால், பார்ப்பனியத்தையும், கண்மூடிப்பழக்கங்களையும் மண்மூடிப்போகச் சொன்ன வள்ளலாரையும், பார்ப்பனீயத்தை எதிர்த்துக் கொலையுண்டு வரலாற்றில் மறைக்கப்பட்டு விட்ட பல ஆன்மீகவாதிகளையும் படுகொலையில் இருந்து காப்பாற்றி இருகக் முடியும். வள்ளலாரை ஜோதியில் எரித்த அதே வெறி. நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம் இன்னமும் சிவனடியார் ஆறுமுக சாமியை நோக்கிப் பாய்ந்தபோது. நக்சல்பாரிகள்தான் தமிழைக் காப்பாற்றினர். பார்ப்பனியத்தின் கொலைவெறிச் சதியை முறியடித்தனர். ஏனென்றால், எங்கெல்லாம் அநீதி இழைக்கப்படுகிறதோ,எங்கெல்லாம் உரிமைகள் நசுக்கப்படுகின்றனவோ, அங்கெல்லாம் வசந்தத்தின் இடி முழக்கமாய் மக்களுக்கு வெற்றியை கொடுக்க களமிறங்கும் நக்சல்பாரி. அதுதான் சிதம்பரம் தமிழ் வழிபாடு விசயத்திலும் நடந்துள்ளது.
இன்று தமிழ், ஆத்திகம் என்று பேசும் இன்று பார்ப்பன அடியாளும், அவனது கட்டுரையை பிரசூரித்த பார்ப்பன பத்திரிகையும் இது வரை தமிழர் என்ற சொல்லப்படுபவர்களில் பெரும்பான்மையினர் பிரச்சினைக்கும் சரி, இந்துக்கள் எனப்படுபவர்கள் இந்து என்ற பெயரிலேயே அவமாரியதை செய்யப்படும் பிரச்சினையிலு சரி குரல் கொடுத்ததேயில்லை. அங்கெல்லாம் நாம்தான் கொடுத்துள்ளோம். அதே போலத்தான் ஆறுமுகச்சாமி விசயத்திலும்.
சுயமரியாதையுள்ள ஓவ்வொருத்தனும் அர்ஜூன் சம்பத் போன்ற ரவுடிகளின் திமிர்பிடித்த பேச்சுக்களை பிரசூரிக்கும் பார்ப்பன கொழுப்பெடுத்த தினமணியை கடுமையாக கண்டிக்க வேண்டியுள்ளது.
இதனை அனைத்து நண்பர்களுக்கும் அனுப்புங்கள்.

அசுரன்

Monday, March 3, 2008

வேதங்கள் - தமிழர் மரபுக்கு முரணானது = சாருநிவேதிதா


(‘இன்னார் செய்தாரை ஒறுத்தல்’ எனும் நாகரிகமான தமிழர் மரபுக்கு - சாராயத்தைக் குடித்துவிட்டு எதிரியின் கண்களைத் தோண்டு என்று கூறும் வேதங்கள் நேர் முரணானது என்று, எழுத்தாளர் சாருநிவேதிதா, எழுதியுள்ளார். ராஜமுத்திரை வார இதழில் - (மார்ச் 22) வெளிவந்த கட்டுரை இது.)பெரியார் மீது எனக்குக் கொஞ்சம் மனஸ்தாபம் இருந்தது. மக்களிடையே சமத்துவத்தை ஏற்படுத்துவதற்காக தன் வாழ்நாள் முழுவதும் அவர் நடத்திய போராட்டத்தில் கலாச்சாரம் சம்பந்தப் பட்ட பல செழுமையான பகுதிகளும் அடித்துக் கொண்டு போய்விட்டனவே என்பதுதான் என் மனஸ்தாபத்திற்குக் காரணம்.உதாரணமாக, பிராமணீயத்தை எதிர்ப்பதற்காக சமஸ்கிருத மொழியை எதிர்த்தார். அதனால் காளிதாசன் எழுதிய அதி அற்புத காவியங்களை நாம் படிக்க முடியாமல் போயிற்று. வருண பேதத்தை முன்னிறுத்துகின்றன என்பதால் புராணங்களையும், இதிகாசங் களையும் எதிர்த்தார். அதனால் உலக இலக்கியங்களிலேயே தலைசிறந்த காவியம் என்று உலக எழுத்தாளர்களால் போற்றப்படும் மகாபாரதத்தைப் படிக்காமல் விட்டோம்.இப்படியெல்லாம் இவ்வளவு காலம் நினைத்துக் கொண்டிருந்தேன். அதனால் சமஸ்கிருதத்தில் உள்ள முக்கிய நூல்களை நானே படிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் பெரியாரின் கோபமும் ஆவேசமும் எனக்குப் புரிந்தது, முக்கியமாக வேதத்தைப் படித்தபோது. ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களே இந்து மதத்தின் ஆகப் பெரிய புனித நூல்களாகக் கருதப்படுபவை. வேதம் படித்தவனே அறிஞனாகக் கருதப்படுகிறான். மேலும், சூத்திரனோ அல்லது நான்கு வருணங்களுக்கு அப்பாற்பட்ட விளிம்பு நிலையில் தள்ளப்பட்டு, இழி தொழிலைச் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்ட அடிமை மக்களோ வேதத்தைக் கேட்டாலே போதும், அவர்கள் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றச் சொல்கிறது மனு தர்மம். வேதத்தை முற்றாக அறிந்தவன், வேதாந்தி என அழைக்கப்பட்டான்.வேதத்தில் இல்லாததே இல்லை யென்று இன்றளவும் கருதப்படுகிறது. நான்கு வேதங்களையும் ஆரம்பத்திலிருந்து முடிவு வரையும், பின்னர் முடிவிலிருந்து ஆரம்பம் வரை தலைகீழாகவும் ஓதத் தெரிந்தவர்கள் கனபாடிகள் என்று அழைக்கப்படுகின்றனர். இக்காரணங்களால் வேதத்தை நான் மிகுந்த மரியாதையுடனேயே வாசிக்க ஆரம்பித்தேன். பிறகுதான் தெரிந்தது, தெருவில் நடக்கும்போது காலில் அசிங்கத்தை மிதித்து விட்டேன் என்று. ஆம்! வேதத்தில் அவ்வளவு அசிங்கமும் ஆபாசமும் உள்ளன. இந்துக்களில் அவர்கள் எந்த சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவர்கள் வீட்டில் எந்த சுபகாரியங்கள் நடந்தாலும் அங்கே தவறாமல் அழைக்கப்படுகவர்கள் புரோகிதர்கள். ‘வாத்தியார்’ என்று பிராமணர்களின் பேச்சு மொழியால் அழைக்கப்படும் அப்புரோகிதர்கள் அந்த சுபகாரியத்தின் போது ஹோமம் வளர்த்து பல மந்திரங்களை மணிக்கணக்கில் ஓதுவார்கள்.அந்த மந்திரங்களின் அர்த்தத்தைக் கேட்டால் நீங்கள் எல்லோரும் பயந்து ஓடி விடுவீர்கள். ஆம்! ஒரு சுப தினத்தின் போது ‘என்னை எதிர்ப்பவர்கள் நாசமாய்ப் போக; அவர்களின் கண்களைத் தோண்டி எடுக்க! புல் பூண்டு இல்லாமல் அவர்கள் வம்சம் அழிந்து போக!’ என்ற ரீதியில் மணிக் கணக்கில் ஒருவர் சாபம் விட்டால், அவ்வார்த்தைகள் அந்தச் சூழலை எவ்வளவு அருவருப்பாக மாற்றும்? வேதம் முழுக்கவும் இம்மாதிரி அருவருப்பான வசைகளே நிறைந்திருக்கின்றன. இடையிடையே கவித்துவம் நிரம்பிய சில அற்புதமான பகுதிகளும் உண்டு. உதாரணமாக:‘நான் தேனைவிட தேனாயுள்ளேன். மதுரத்தைவிட மதுவாயுள்ளேன். நீ என்னையே தேன் மிகும் சாகையாக விரும்பு.’‘எனது சலனம் தேன் மயம். என் மனம் தேன் மயம். நான் மொழியால் தேன் மயமாய் மொழிகிறேன். நான் தேன் தோற்றமாக வேண்டும்.’ (அதர்வ வேதம்; காண்டம்: 1.34 தேன் மயம்)ஆனால், இந்தக் கவித்துவத்தையும் மீறி வேதம் முழுக்கவும் நிரம்பியிருப்பது: துவேஷம். எதிரிகள் மீதான துவேஷம். எதிரிகள் யார் என்று பார்த்தால் பிராமணர்களுக்கு அடிமையாகத் தங்களை ஒப்புக் கொடுக்காதவர்கள். அவர்கள் மீதான சாபத்தைப் பாருங்கள்.‘இந்திரன் தனது வச்சிராயு தத்தால் அவர்களால் சிரங்களைத் துண்டித்திடுக.’‘எங்கள் பசுவை நீ இம்சித்தால் நாங்கள் உன்னைக் குத்திக் கொல் வோம்’. (அத்தியாயம்: சம்ஹாரம்)‘எங்கள் எதிரிகளை ருத்திரன் நாசம் செய்க’‘சாபத்தால் சபிப்பவள், தன் மக்களையே புசிப்பாளாக’‘தனது மகனையும், சகோதரியையும் பெண்ணையுமே புசித்திடுக.’‘அக்னியே! எங்களைத் துவேஷிப் பவனை உனது சுடரால் எரித்து விடு.’‘இம்சை செய்பவனே! உங்களது புன்மைகள் மறுபடியும் பின்புறமே வீழ்க! உங்கள் தோழனைப் புசியுங்கள்; உங்களது மாமிசத்தைப் புசியுங்கள்’.‘இந்திரா! சத்துரு சேனையை மயக்கம் செய். அதன் கண்களைப் பிடுங்கு.’‘அவனைக் கொல்லு; அவனது விலா எலும்புகளை நொறுக்கு. அவன் சீவனற்றவனாகுக. அவன் சுவாசம் நீங்குக.’‘இந்திரா! இதோ பிழிந்த சோமன். மதத்துக்கு இதனைப் பருகு. விரிந்து விசாலமாயுள்ள உனது வயிற்றில் அச்சோமனைப் பொழிந்து கொள். எங்கள் எதிரிகளைக் கொன்று அவர்களின் பசுக்களைப் பாழாக்கு.’ இப்போது புரிகிறதா, சில சாமியார்கள் கொலை கொள்ளைகளில் ஈடுபடுவது ஒன்றும் சாஸ்திரங்களுக்கு விரோத மானதல்ல என்பதும், வேதங்களைப் பின்பற்றியே அவர்கள் அக்காரியங்களில் ஈடுபடுகின்றனர் என்பதும்? ஆனால் என்ன செய்வது? 3000 ஆண்டுகளுக்கு முன்பு இப்போது இருப்பது போல நீதிமன்றங்கள் இல்லை என்பதை சாமியார்கள் மறந்து விடுகின்றனர். மேலே கூறியுள்ள சுலோகங்கள் அனைத்தும் அதர்வண வேதத்தில் உள்ளவை. இப்படியே அந்த வேதத்தில் 20 காண்டங்கள் உள்ளன.எதிரிகளும் தங்களுக்கு அடிமையாக மறுப்பவர்களும் அழிய வேண்டும் என்ற ‘அரிய’ கருத்துக்கு அடுத்தபடியாக வேதங்களில் தெரியும் மற்றொரு ‘உன்னத’ குணாம்சம்: சுயநலம். நானும் என் இனத்தைச் சார்ந்தவர்களும் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும் என்ற சுயநலம். இந்த சுயநலத்திற்காக தேவர்களுக்கு வேள்வி வளர்த்து அதில் நெய்யையும் குதிரைகளையும் போட்டு எரித்து, சொர்க்கத்திலிருக்கும் அவர்களை பூலோகத்துக்கு வரவழைத்து, சோம பானம் என்ற லஞ்சத்தைப் படையல் செய்து எதிரிகளை அழித்து விட்டு, எங்களை மட்டும் வாழவை என்று அவர்களை வேண்டுவதே வேதம்! வேதமந்திரங்கள் முழுக்கவும் இத்தகைய சுயநலத்தையும், துவேஷத்தையும்தான் முழங்குகின்றன.இன்றைய சாமியார்கள் ரவுடிகளுக்குப் பணம் கொடுத்து தங்கள் எதிரிகளைக் கொலை செய்கிறார்களே, அதே கதை தான் வேதங்கள் முழுக்கவும் விரவிக் கிடக்கிறது.‘ஜயித்த பொருள் நம்முடையது. தோன்றுவது நம்முடையது. ரிதம் நம்முடையது. தேஜஸ் நம்முடையது. பிரம்மம் நம்முடையது. சுவர்க்கம் நம்முடையது. யக்ஞம் நம்முடையது. பசுக்கள் நம்முடையது.’அதர்வண வேதத்தில் ஜயகோஷம் என்ற அத்தியாயம் ‘நான் சொல்வதை ஜயிக்க வேண்டும். நான் செல்வம் மிகுந்தவனாக வேண்டும்; நீ என்னில் செல்வத்தை அளி.’அதர்வண வேதம் செல்வம் என்ற அத்தியாயம்.‘அடுத்தவன் அழிய வேண்டும்; நான் மட்டும் நன்றாக இருக்க வேண்டும்’ என்ற ‘உயரிய’ கருத்தை வலியுறுத்தும் வேத மந்திரங்களை இங்கே மேற்கோள் காட்டுவது மிகவும் சிரமமானது. ஏனென்றால் எல்லா மந்திரங்களுமே அப்படித்தான் உள்ளன.நான்கு வேதங்களில் அதர்வண வேதம் மட்டும் சிறிது பரவாயில்லை என்று கூறலாம். ஏனென்றால், அதில் காமம் பற்றிய சில கவித்துவமான பகுதிகள் உள்ளன.ரிக் வேதமோ முழுக்க முழுக்க துதிப் பாடல்கள் ‘இந்திரனே இங்கே வா, சோமத்தைப் பருகு. தலைவனான நீ, வழிபடும் மற்றவர்களையெல்லாம் கடந்து எங்களிடம் துரிதமாகவும், எங்களுக்கு மிக்க உணவை அளிக்கவும்.’ இப்படி ரிக் வேதத்தில் உள்ள மொத்த மந்திரங்களின் எண்ணிக்கை 10,552. விஞ்ஞான வளர்ச்சியுற்ற இன்றைய காலகட்டத்தில் இத்தகைய வெற்றுச் சொற்களுக்கு எந்த அர்த்தமுமே இருக்க முடியாது.நாகரிக வளர்ச்சியில் மிகவும் பின் தங்கியிருந்த ஒரு இனம் எதிரிகளிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக இயற்கையையும் வானுலகில் வசிப்பதாக அவர்கள் நம்பிய தேவர்களையும் துணைக்கு அழைத்த பிரார்த்தனைப் பாடல்களே வேதங்கள். அந்நியர்களைக் குறித்த இவர்களது பயமே சுயநலமாகவும் துவேஷமாகவும் மாறியுள்ளது.ஆனால் தமிழ்ப் பாரம்பரியமோ ‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்’ என்கிறது நமக்குத் தீமை புரிந்த ஒருவனைத் தண்டிக்கும் வழி. என்னவென்றால், அவன் வெட்கப்படும் விதத்தில் அவனுக்கு நன்மை புரிவதே. இதுவும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டதுதான். இப்படிப்பட்ட சிந்தனையின் ஒரு கீற்றைக்கூட நான்கு வேதங்களிலும் காண முடியவில்லை.எனவே ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற சீரிய தமிழ் மரபுக்கு ‘இந்திரனே! நான் அளிக்கும் சாராயத்தைக் குடித்து விட்டு என் எதிரியின் கண்களைத் தோண்டு’ என்று உபதேசிக்கும் வேதங்கள் நான்கும் முற்றிலும் மாறுபட்டது. எனவே, வேதங்களைப் பற்றிய ‘ஜீம்பூம்பா’ கருத்துக்கள் அனைத்தும் பொய்யானவை; தவறானவை.-

-சாரு நிவேதிதா -